நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

” ம்..ம்..! நீ சாப்பிடு…!!”

சாப்பிடும் போது.. அவளைப் பார்த்தான்.

”என்னடா…?” என்றாள்.

தலையை ஆட்டினான்.

” பின்ன பாக்ற…?”

ஒரு சின்ன… சிக்கன் பீஸை எடுத்து அவள் வாயில் வைத்தான் ”திண்ணு பாரு…”

திண்றாள்.. உமா..!

”என்ன தெரியுது..?” எனக் கேட்டான்.

”காரம்…” என்றாள்.

” அதான் மேட்டர்..!! பயங்கர காரம்..!!” என்றுவிட்டு எழுந்து போய் தண்ணீர் குடித்தான்.

மெதுவாக ”மாணிக்கம் வந்திருந்தான்டா..” என்றாள்.

சட்டென… அவன் முகம் சுணங்கியது..!

”காலைல வந்துட்டு.. அப்பவே போய்ட்டான்..”

மௌனமாக உட்கார்ந்து சாப்பிட்டான்.

அவனை அணைத்தவாறு படுத்த உமா… மெதுவாக அவன் இடது கையை எடுத்து வைத்துக் கொண்டு தடவினாள்.
”நா சொல்றத… ஆத்திரப்படாம கேளு..”

அவன் டிவியைப் பார்த்தான்.

”அடுத்த மாசம் கல்யாணம்டா..”

” யாருக்கு…?”

”எனக்குத்தான்..! மாணிக்கம் உறுதியா சொல்லியிருக்கான்..”

” உன் கழுத்துல தாழி ஏர்றவரை… நான் நம்ப மாட்டேன்..”

”நீ வேனா பாரு..!! ”

அவன் அமைதியாகச் சாப்பிட்டான்.

”தம்பு…”

” ம்…”

” நா…கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா..நீ என்னடா பண்ணுவ..?”

” எங்க… போவ…?”

” இல்ல. .. ஒருவேள.. கல்யாணமாகி மாணிக்கம் வீட்டுக்கு போய்ட்டா…?”

” ஓ..!!” என்றான்.

”அதான்டா.. என் கவலை..? நீ வேனா.. என்கூடவே வந்துரு..! உன்னை விட்டுட்டு என்னாலயும் நிம்மதியா இருக்க முடியாது..! என்கூட இருந்துட்டே நீ வேலைக்கு போய் சம்பாரி..! கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுர்றேன்..!!”

அவன் அமைதியாகச் சாப்பிட..

”என் கவலையெல்லாம் உன்னைப் பத்தித்தான்டா.. நீ லைப்ல செட்டிலாகிட்டா.. நான் வேற எதுக்கும் கவலப்பட மாட்டேன்..!!” என்றாள்.

இரவு ஏழு மணிக்கு மேல்….

சரவணன் வீட்டுக்குப் போனான் தாமு.
சரவணன் தங்கை சரண்யா.. வாசற்படியிலேயே நின்றிருந்தாள்.

”உக்கண்ணன்.. இருக்கானா..?” தாமு கேட்டான்.

”ம்..ம்..! இருக்கான்…!!” அவள் பார்வை எங்கோ தூரத்தில் இருந்தது. பாவாடை.. சட்டை போட்டிருந்தாள். வாயில்.. அவளது செயின்..!!

”வழி…” என்றான்.

ஒதுங்கி நின்றாள்.

அவன்.. அவளைக் கடந்து உள்ளே போனான். பின்னாலிருந்து…
” என்ன பவுடர் போடற…?” என்று கேட்டாள்.

நின்று திரும்பி ”ஏன்…?” என்றான்.

”கமகமனு மணக்குது..”

சிரித்து விட்டு உள்ளே போனான்.
டிவி பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்த சரவணன்..
”வாடா…” என்றான்.

”வெளில போலாம்…வா..” என்றான் தாமு.

வஞ்சனா பற்றி.. அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது சரவணனிடம் சொல்ல நினைத்தான்.
டிவியை அணைத்து விட்டு எழுந்து வந்தான் சரவணன்.

வாசற்படியில் நின்றிருந்த.. சரண்யாவின் தலையில் தட்டி..
”உள்ள போடி..!!” என்றுவிட்டு தாமுவுடன் வெளியேறினான் சரவணன்….!!!!

பக்கத்தில் இருந்த காலி கிரௌண்டுக்குப் போனார்கள்.
” உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்டா..” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான் தாமு.

”சொல்லு…” என்றான் சரவணன்.

” நா… ஒரு பொண்ண.. லவ் பண்றேன்..”

”பசங்க… எலலாரும் பொண்ணத்தான் லவ் பண்ணுவாங்க…” என்று சிரித்தான் சரவணன்.

தாமு இளித்து.. ”இத.. உன்கிட்டத்தான் மொத சொல்றேன்..!!”

”அதுசரி… யாரு அவ…? கீர்த்தனாவா…?”

” கீர்த்தனாவா..? சே…அவ இல்ல..!”