‘குட்டி தேவதை… ஒன்று குணிந்து எழதுகிறது..!!’
அவனும் புன்சிரிப்புக் காட்டினான்.
”ஹாய்…”
”ஹாய்ணா..”
” என்ன.. ஹோம் ஒர்க்கா..?”
”ம்ம்…!!”
” டென்த்தா.. இந்த வருசம்..?”
”ம்ம்…!!”
கீர்த்தனா ”உக்காரு தாமு..”என்றாள்.
”இல்ல… பரவால்ல…” என்றான்.
சைலஜா ”நீங்க ஒன்னும் கடன் வாங்க வல்லியே..?” என்று கேட்டாள்.
”இல்ல.. உங்கக்காவ பாக்க வந்தேன்..”
”அப்றம் என்ன… தாராளமா.. உக்காரலாம்..! சிட்..ப்ளீஸ்..!!” சைலஜா சிரித்துக் கொண்டே சொல்ல…
மறுக்காமல் உட்கார்ந்தான்.
கீர்த்தனா பக்கத்துச் சேரில் உட்கார்ந்து ”நான்.. ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே தாமு..?” என்றாள்.
அவளைப் பார்த்தான் ”என்ன..கீர்த்தி..?”
”அவள்ளாம்.. உனக்கு ஒத்து வரமாட்டா..! அவள நீ.. மறந்துடறது..பெட்டர்..!!”
அவனது முகம் இருண்டது.! ”ஏதாவது சொல்லுச்சா..?”
”இல்ல..! அவள்ளாம் எதுமே சொல்லல..! நீ என் பிரெண்டுங்கறதுனால… நானா உன்கிட்ட சொல்றேன்..!!”என்றாள்.
சைலஜா.. அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் முகம் விழுந்து விட்டது.
‘ஏதாவது சொல்லியிருப்பாளோ..?’
சட்டென ஒரு பெருமூச்சு விட்டான்.
” மூனு நாள் பாக்காம இருக்கறதே…எனக்கு எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா..?” என்றான் வேதணை கலந்த குரலில்.!
சைலஜா…தன் அக்காளிடம் மெல்லக் கேட்டாள்.!
”யாரைடீ…?”
”இது… உனக்கு தேவையில்லாதது.! நீ எழுது..!!” என்றாள் கீர்த்தனா.
”நீ ஒன்னும் எழுதி தரப்போறதில்லே..! நான்தான் எழுதப்போறேன்..!”என்றவள் தாமுவைப் பார்த்து.. நேரடியாகக் கேட்டாள் ”அண்ணா யார லவ் பண்றீங்க..?”
கஷ்டமாகப் புன்னகைத்தான்..!
கீர்த்தனா ”நீ தெரிஞ்சு என்னடி பண்ணப்போறே..?” என்று கேட்டாள்.
”நா.. உன்ன கேக்கல..” என தாமுவையே பார்த்தாள்.
தாமு மெல்லிய குரலில்..”வஞ்சனா..”என்றான்.
”ஆ…!!” என வாயைப் பிளந்தாள் சைலஜா.!
” அவள மறந்துரு..தாமு..! என்னால இது மட்டும்தான் சொல்ல முடியும்…” தாமுவைப் பார்த்துச் சொன்னாள் கீர்த்தனா.
அவனுள் ஒரு வலி பரவியது..!
‘ச்ச… இவள் வேஸ்ட்..’
சட்டென எழுந்து நின்றான்.
அவன் கையைப் பிடித்தாள் கீர்த்தனா.
”என்மேல கோபமா..?”
”உன்மேல என்ன கோபம்..?” பொய்யாகச் சிரித்தான் ”நா…போறேன்..”
அவன் கையை விட்டாள் ”ம்..”
இருண்ட முகத்துடன் அவன் நகர…
”அண்ணா…” என்றாள் சைலஜா.
3
அவளைப் பார்த்தான்.
” நா.. என்ன நெனைக்கறேன்னா…. இவ சொல்றதுதான் சரி…. அந்தக்கா ரேஞ்சே வேற…!! பேசாம.. அந்தக்காவ மறந்துட்டு… வேற யாராவத…ட்ரை பண்ணுங்க..!!” என்று.. சிரித்த முகத்துடன் சொன்னாள் சைலஜா….!!!!
இப்ப என்னடா.. பண்றது..?” மிகவும் மனத்தவிப்புடன்.. சரவணனைப் பார்த்துக் கேட்டான் தாமு.
சிகரெட்டை ஆழமாக உறிஞ்சினான் சரவணன். மெதுவாக சிகரெட்டை.. தாமுவிடம் நீட்டினான்.
”ம்… நல்லா தம் கட்டி… இழு..!!”
தாமு வாங்கவில்லை. ”என்னடா… நீ…?”
”ஒரு நண்பனா… இதுக்கு மேல.. என்னை என்னடா பண்ணச்சொல்ற..?”
”ஏதாவது..சொல்லுடா..!” தாமவின் குரல் பலவீனமாக இருந்தது..!
”அப்படியா…?” கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.
”ம்..ம்..!!”
” ம்..! அழகழகான பொண்ணுங்கள படைச்ச.. ஆண்டவன்… ரொம்ப.. ரொம்ப..நல்லவன்..!!” என்றான்.
அவனைக் குழப்பமாகப் பார்த்தான் தாமு.
” என்னடா சொல்ற..?”
”நீதான்டா சொன்ன..? ஏதாவது சொல்லுன்னு..? அதான் ஒரு தத்துவத்த எடுத்து விட்டேன்..! எப்படி இருக்கு.. நம்ம தத்துவம்..?” என்று சிரித்தான்.
”என் பீலிங்கஸ்.. புரியாம பேசாதடா..”
”சரி…இப்ப என்ன பண்ணனுங்கற…?”