நண்பனின் காதலி – 4 90

விக்கி ரொம்ப உற்சாகத்தோடு ஆபிஸ் போனான் .பின் அன்று முழுதும் மிகவும் உற்சாகமாக வேலை பார்த்தான் .

அப்புறம் லஞ்ச் டைத்தின் போது மணி வருண் விக்கி எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்த போது மணி அவனிடிம் கேட்டான், என்னடா ரெண்டு நாளா ரொம்ப பிரசாவும் சந்தோசமாவும் வேலை செய்யறியே என்ன விஷயம் என்றான் .அதாலம் ஒன்னும் இல்லடா என்றான் .
பின் மணியும் அவர்களோடு கேண்டின் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தான் ,அதை பார்த்த விக்கி ஏண்டா எப்பயுமே வீட்டு சாப்பாடுதானே கொண்டு வருவ.
இன்னைக்கு என்ன புதுசா கேண்டின்ல வாங்கி சாப்புடுற ஏன் வள்ளிக்கு என்ன ஆச்சு என கேட்டான் .அது வள்ளிக்கு இப்ப 7 மாசம் ஆச்சா அதுனால அவள அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்னு சொல்லி நான்தான் சமைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ,அதான் கேண்டின் சாப்பாடு என்றான் .
அப்புறம் வருண் விக்கிக்கு சேர்த்து சாப்பாடு வாங்கி வந்தான் .விக்கி அதை எடுத்து வாயில் வைத்தான் .ஆனால் அதன் சுவை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .
காரணம் இரவு அவன் சாப்பிட்ட சுவாதியின் சாப்பாடு அந்த சாப்பாட்டின் ருசி இன்னும் அவன் நாவிலே இருந்தது .அதையும் இதையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு அந்த டேஸ்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அதனால இதை சாப்பிட்மாலே இருக்காலம் என்று நினைத்து கொண்டான் .
அவன் சாப்பாடு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை பார்த்து மணி கேட்டான் ஏண்டா சாப்பட்ட ஒதுக்கி வைக்கிறே என கேட்டான் . மணி நீ கேட்டலே ஏன்டா ரொம்ப பிரசா இருக்கேன்னு ஏன் தெரியுமா என கேட்டான் .
ஏன்டா என்றான் மணி நேத்து ஒரு இடத்துல சோறு சாப்பிட்டேன் .அப்படியே நம்ம தமில் நாட்டு சமையல் இன்னும் சொல்ல போனா எங்க அம்மா சமைச்ச மாதிரி இருந்துச்சு அந்த சாப்பாட சாப்பிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறும் நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு நிம்மதியா தூங்கினென் .
அதான் நான் பிரசா இருக்க காரணம் .அதான் அப்படி ஒரு நல்ல சாப்பட சாப்பிட்டு இப்படி ஒரு சாப்பட சாப்புடுனுமான்னுதான் சாப்பிடல என்றான் விக்கி .ம்ம் அப்படி என்ன நல்லா இருந்துருக்க போகுது என் பொண்டாட்டி சமையல விடவா என்றான் மணி .