நண்பனின் காதலி – 4 90

அதை கேட்டு விக்கி முகம் வாடி அமைதி ஆனான் .

சுவாதி அவ்வாறு எதனால இப்படி ஒரு கொள்கை வச்சு இருக்கன்னு விக்கி கிட்ட கேட்ட பின் விக்கி பதில் எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .

அதை பார்த்த சுவாதி என்ன விக்கி எதுவும் தப்பா கேட்ட்டுடேனா அமைதியா இருக்க என்றாள் .யே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எல்லாம் பழச நினச்சு பாத்து ஒரு மாதிரி ஆகிடுச்சு என்றான் .
அப்படி என்ன பழசு என்கிட்ட சொல்லு என்றாள் .அது வந்து வந்து என்று விக்கி சொல்ல தயங்கினான் .அவன் தயங்குவதை பார்த்து புரிந்த கொண்ட சுவாதி சரி விக்கி உனக்கு அத பத்தி சொல்ல பிடிக்காட்டி சொல்ல வேணாம் விட்ரு நான் கம்பெல் பன்னல என்றாள் .
அப்படி இல்ல எனக்கு பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அத நினச்சு பாத்து கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு அதான் அமைதியா இருந்தேன் .பரவல இப்ப நான் சொல்றேன் எனக்கும்அத பத்தி எல்லாம் யார்கிட்டேயாச்சும் சொல்லணும் பேசணும் போல இருக்கு என்றான் .அப்ப சரி சொல்லு என்றாள் .
சரி சொல்றேன் ஆனா நீ அத யார்கிட்டயும் சொல்ல கூடாது என்றான் .ஓகே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் நீ சொல்லு என்றாள் .விக்கி மூச்சை நன்கு வெளியிட்டு விட்டு காதல் தான் எல்லாருக்கும் அவங்க லைப்ப மாத்துறது என் லைப்பும் அப்படி ஒரு ரெண்டு காதல்ல தான் மாறுச்சு என்றான் .ம்ம் சரி சொல்லு என்றாள் .
நான் காலேஜ்ல ug படிக்கும் போது உமான்னு ஒரு பொண்ண காதலிச்சென் .ரெண்டு பேரும் படத்துல சொல்ற மாதிரி உயிருக்கு உயிரா காதலிச்சோம் .ug படிப்பு முடிஞ்ச உடனே அவங்க வீட்ல அவங்களுக்கு மாப்பிளை பாத்தாங்க .
எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னே தெரியல .அப்புறம் நான் யோசிச்சு வீட்ல இந்த மாதிரி ஒரு பொண்ண லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு கேட்டேன் .எங்க அப்பா எடுத்த உடனே பொண்ணு எந்த சாதின்னு கேட்டார் .
நான் இது வரைக்கும் அவ கிட்ட அவ என்ன சாதின்னு கேட்டது இல்ல சரி கேப்போம் அப்படின்னு அவ கிட்ட கேட்டு வந்து சொன்னேன்
.ஆனா எங்க அப்பா என்னாலலாம் அந்த சாதில பொண்ணு எடுத்து இந்த வீட்டுக்கு மருமகளா வர கூடாதுன்னு எங்க அப்பா சொன்னாரு .எனக்கு கோபம் வந்துருச்சு நீங்க ஒன்னும் என் வாழ்க்கைய அமைக்க வேணாம் நானே அமைசுகிறேன் சொல்லி வெளியே வந்துட்டேன்.
அப்புறம் அவ கிட்ட போயி என்னையே Register marraige பண்ணிக்க சம்மதமான்னு கேட்டேன் .அவளும் சந்தோசமா சரின்னு சொன்னா ,நான் அவள ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் ஒரு Register ஆபிஸ் கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ண ரெடி ஆனப்ப அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் நிறைய ஆளுகள கூப்பிட்டு வந்து எங்க ரெண்டு பேத்தையும் பிரிச்சுட்டாங்க .
அப்புறம் அவ வீட்ல அவளுக்கு அவசர கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .
அதுக்கு அப்புறம் எனக்கு இந்த உலகமே நின்னு போன மாதிரி ஆகிடுச்சு அது என் முத லவ் வேறையா அதுனால ரொம்ப என்னத்தையோ இழந்த மாதிரி ஒரு பீலிங் .