நண்பனின் காதலி – 4 87

விக்கி தன்னை மறந்து அவளை ரசித்தான் .பின் அவ்வோபோது அவள் முகத்தை மறைக்கும் அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கையை கொண்டு போனான் .
அதற்குள் சிக்னல் போட்டு பின்னே இருக்கும் கார்காரன் ஆரன் அடிக்க விக்கி முன்னே திரும்பினான் .பின் வீட்டிற்கு வண்டியை ஓட்டினான் .போகும் போது அடிக்கடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே வந்தான் .
பின் வீடு வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் தூக்க கலக்கத்தில் அதுக்குள்ளே வீடு வந்துருச்சா என்றாள் .ஆமா என்றான் .சே டாக்டர் ஊசி போட்டதுனால தூக்கமா வந்து இருச்சு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .பின் இருவரும் வீட்டிற்கு உள்ளே போனார்கள் .
சரி விக்கி எனக்கு ரொம்ப டய்ர்ட்டா இருக்கு நான் போயி தூங்குரென் என்றாள் .ஓகே குட் நைட் என்றான் .ஹ by the bye தேங்க்ஸ் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கா என்றான் .இல்ல இன்னைக்கு புல்லா கோப படாம இருந்ததுக்கு என்று சொல்லி சிரித்தாள் .
ஒ அப்படியா என்று அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு எ உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் .பிரண்ட்லியா மனசு விட்டு பேசுனதுக்கு என்றான் .
ஓகே என்று சொல்லி சிரித்தாள் .விக்கி மீண்டும் அவள் முகத்தை பார்த்தான் .அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி போயி பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் என்னமோ அவனுக்கு அவள் என்னைக்கும் இல்லாத மாதிரி அழகாக தெரிந்தாள் .
அவள் அங்கு வெளியே சொன்னது போல எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு என்று சுவாதி தன் கர்ப்ப மான தாய் அழகை பிடித்து இருக்கிறது என்று சொன்னது போல
விக்கிக்கும் அவள் அழககாக இருப்பதாக தோன்றியது .பின் அவளிடிம் குட் நைட் சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போனான் .அவனை அறியமால் வாவ் என்றான் .
பின் அந்த நாளை பற்றியும் ஸ்வாதியோடு பார்க்கில் மனம் விட்டு பேசியதை பற்றியும் நினைத்து பார்த்தான் .பின் சுவாதியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து போனது .அவனுக்கு அந்த முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது .
படுத்து இருந்தவன் உடனே எழுந்து அவளை பார்க்க செல்ல எழுந்தான் .அப்போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டது போல இருந்தது .

விக்கி சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் .பின் அவள் முகத்தை பார்க்கலாம் என்று நினைத்த போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று அரை விட்டது போல் இருந்தது .

அது வேறு யாரும் அல்ல விக்கியின் மனசாட்சி தான் அது அவனை போல ஒரு உருவமாகவும் வெளியே வந்தது .வந்து அவனை இன்னொரு அரை விட்டு ஆமா என்ன தீடிருன்னு ரொம்ப நல்லவனா மாறிட்ட அவ கூப்பிட்ட உடனே வாக்கிங் போற
அவ கூட உன் பழைய லைப் பத்தி பேசுற அப்புறம் அந்த கடைகரான் உன்னையே அவ புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குற .அப்புறம் அவ வாந்தி எடுத்த உடனே அவள தாங்கி பிடிக்கிற அப்புறம் அவ மயக்கம் போட்ட தூக்குர அப்புறம் ஆஸ்பத்திரில உன்னையே புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குர டாக்டர் அவளுக்காக உன்னையே திட்டுனா கோப பட மாட்டிங்குற என்ன எதுக்குமே கோப பட மாட்டிங்குற சாப்பாட்டுல உப்பு சேக்கலையா என்று கத்தியது அவன் மனசாட்சி .
விக்கி எதுவம் சொல்லவில்லை சொல்றா ஏன் பேச மாட்டிங்குற என்றது மனம் .அது டாக்டர் அவ ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு சொன்னங்க அதான் கோபபப்படால என்றான் .அது மட்டுமா காரணம் என கேட்டது அவன் மனம் .ஆமா வேற என்ன என்றான் .வேற என்னவா கேப்படா ஒன்னும் தெரியாத மாதிரி நீதான் கார்ல இருக்கும் போது அவள ரசிச்சு பாத்தத எனக்கு தெரியுமே .என்ன அவ என்ன உன் கண்ணுக்கு அவளவு அழகாவா தெரிஞ்சா அப்படி சைட் அடிக்கிற என்றது மனம் .
அவ என்ன அவளவு அழகா என்று அவன் மனம் கேட்டவுடன் விக்கி மீண்டும் சுவாதியை நினைக்க ஆரம்பித்தான் .O God அவ என்ன என்னைக்கும் இல்லாத மாதிரி இன்னைக்கு அழகா இருக்கா பார்க்ல அவ சிரிச்சு பேசுனது அவ மழைய ரசிச்சது அப்புறம் பஜ்ஜி சாப்பிட்டது எல்லாத்தையும் விட அவ வாந்தி எடுத்துட்டு கொஞ்சம் டயர்டா வந்தா பாரு உண்மைலே அதான் அழகு இல்ல இல்ல கார்ல சின்ன குழந்தை மாதிரி தூங்கிட்டு வந்தா பாரு ஐயோ என்ன cute சான்சே இல்ல என்று தனக்கு தானே சொல்லி கொண்டு இருந்தான் .