நண்பனின் காதலி – 4 88

அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .அப்புறம் சொன்னாள் என் லைப்ல சொல்றதுக்குன்னு ஒன்னும் இல்ல என்றாள் .எ சும்மா சொல்லு நான்லாம் சொன்னேன்லே அதுனால நீயும் சொல்லு என்றான் .பின் பார்க்கில் மழை வந்தது சுவாதி சொன்னாள் பாத்தியா என் லைப் பத்தி பேசுறது அந்த வானத்துக்கு கூட பிடிக்கல என்றாள் .
பின் இருவரும் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடினார் .விக்கி சொன்னான் எ கார் ஆச்சும் கொண்டு வந்து இருக்கலாம் மழை இப்படி பெய்யுதே என்ன பண்ண என்றான் .
ஹ மறுபடியும் கோப பட ஆரம்பிச்சுடாத அங்க மழைக்கு ஒதுங்கற மாதிரி ஒரு இடம் இருக்கு வா அங்க போவோம் என்றாள் .இருவரும் ஒரு இடத்தில போய் நின்றார்கள் .மழை நன்கு பெய்து கொண்டு இருந்தது .சுவாதி தனியாக ஒரு பக்கம் நின்று மழை துளிகளை கைகளால் தொட்டு தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள் ,
அப்போது விக்கி அவளை பார்த்தான் .அவன் பார்ப்பதை பார்த்த சுவாதி அவன் பக்கம் வந்து டேய் என் இப்ப என்னையே சைட் அடிக்கிற என்றாள் .
அடசீ உன்னையே யாரு சைட் அடிச்சா .என்னடா இவ ஏதோ லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கலேன்னு பாத்தேன் ,ஏன்னா படத்துல வர ஹீரோஇன் மாதிரி உனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும் அதானே என்றான் .
இல்ல எனக்கு மழைன்னா சுத்தமா பிடிக்காது என்றாள் .அப்புறம் ஏன் மழைய பிடிச்சு பிடிச்சு ரசிச்ச என்றான் .எனக்கு மழைநா பிடிக்காது .ஆனா என் வயத்துல இருக்க என் குழந்தைக்கு பிடிச்சு இருக்கு போல என்றாள் சுவாதி ,அது எப்படி உனக்கு தெரியும் என்றான்

மழை விடமால் பெய்ய இருவரும் அந்த பழைய நிழற் குடையில் விக்கியும் சுவாதியும் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டு இருந்தார்கள் .சொல்லு அது எப்படி உன் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு சொல்ற என கேட்டான் .

அதுவா அங்க மழை பெய்யும் போதே என் வயித்துக்குள்ள இருந்து ஒரு அசைவு ஏதோ அதுக்கு பிடிச்சு இருக்க மாதிரி ஒரு பிலிங் மனசுக்குள்ள ,சரி இங்க வந்ததுக்குப்புரம் எந்த அசைவும் இல்ல
அப்புறம் நான் சும்மா மேல இருந்த விழுந்த அந்த மழை துளிய சும்மா தொட்டேன் உடனே மறுபடியும் அசைவு ,அதான் நான் ஓயாம மழைதுளிகள பிடிச்சு விளையடாவும் அது ரொம்ப சந்தோசமா அசையற மாதிரி இருந்துச்சு அப்பதான் என் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன் .
அதான் நான் மழைய பிடிச்சு பிடிச்சு விளையாண்டேன் .மத்தபடி எனக்கு சுத்தமா மழையே பிடிக்காது .அதுல நனைச்சு யாரு காய்ச்சல் வந்து கிடைப்பா எனக்கு அதுனாலே மழை பிடிக்காது என்றாள் .
ம்ம் நீதான் மழை பிடிக்காதுன்னு சொன்ன ஒரே பொண்ண இருப்ப மத்த பொண்ணுக எல்லாம் ரொம்ப மழை பிடிக்கும்னு சொல்லுவாங்க என்றான் .ம்ம் அதலாம் சும்மா அவளுக படத்துல வர ஹீரோயின் பாத்துட்டு அதே மாதிரி எனக்கு மழைன்னா பிடிக்கும் அதுல நனைய பிடிக்கும் இயற்கைய ரசிக்க பிடிக்கும்னு பிலா விடுவாளுக என்றாள் .
அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே சொன்னான் .ya you are right என்றான் .எ உனக்கு மழை பிடிக்குமா என கேட்டாள் .ம்ம் ரொம்ப பிடிக்கும் என்றான் .ஏன் பிடிக்கும் என்றாள் .
அத சொன்னா திட்ட கூடாது என்றான் .திட்ட மாட்டேன் சொல்லு என்றாள் .சரி அப்ப கொஞ்சம் கிட்ட வந்து உன் காத கொடு என்றான் .அவளும் அவன் கிட்ட போனாள் .அது மழையில நனஞ்சு வர பொண்ணுக செமையா இருக்கும் மழைக்கும் அதுக்கும் சில நேரத்துல அதுக பார்ட்ஸ் சில சுப்பரா இருக்கும் என்றான் மெல்ல அவள் காதில் .
சீ கருமம் பிடிச்சவனே என்றாள் .பாத்தியா நீ திட்டுற இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் சொன்னது என்றான் .அவள் சிரித்து கொண்டே சொன்னாள் அப்ப இதுக்குதான் உனக்கு மழை பிடிக்குமா என்றாள் .ஏ எனக்குன்னு இல்ல நாட்ல முக்கால்வாசி ஆம்பிளைக மழைய இதுக்குதான் பிடிக்கும்னு சொல்றாங்கே .
என்ன நான் வெளிபடையா சொல்லிட்டேன் .அவங்கே நடிக்கிறாங்கே மத்த படி அவேங்களும் மழைல நனஞ்சு வர பொண்ணுகள நல்லா சைட் அடிப்பானுக ஆனா வெளிய காட்டிக்கிற மாட்டானுக என்றான் .
யே இப்ப நான் மழைல நனஞ்சு இருக்கேன் அப்ப என்னையும் நீ சைட் அடிச்சியா என கேட்டாள் .அவள் அவ்வாறு கேட்கும் போது அவள் முகத்தை நன்கு பார்த்தான் .பின்பு சொன்னான் சே உன்ன போயி யாரு சைட் அடிப்பா என்றான் .யே பொய் சொல்லாத நீ பாத்தத நான் பாத்தேன் இப்பதான் சொன்ன நீ நடிக்க மாட்டேன்னு என்றாள் .
பாத்தேன் எந்த ஆங்கில்யாச்சும் நீ அழகா இருக்கியான்னு நீ எந்த ஆங்கில்யும் அழகா இல்ல என்றான் .ஒ அப்படியா என்றாள் சிரித்து கொண்டே ,எ முந்தி ஆச்சும் நீ சுமாரா இருந்த இப்ப நீ கர்ப்பமா இருக்கிறதுக்கும் அதுக்கும் குண்டாகி ரொம்ப அசிங்கமா இருக்க என்றான் .அதை கேட்டு சுவாதி சிரித்தாள் என்னடி உன்னையே அசிங்கமா இருக்கேன்னு சொல்ற நீ கோபப்படாம சிரிக்கிற என்றான் .
எனக்கு இதான் பிடிச்சுருக்கு என்றாள் .ஒ செண்டிமெண்டா நான் அந்த பக்கம் வரல என்னையே ஆள விடுப்பா என்றான் .உன்னையே யாரும் கூப்பிடுல என்று சொல்லி சிரித்தாள் .
அவனும் சிரித்தான் சரி உன் லைப் பத்தி சொல்லு என்றான் .மீண்டும் அவள் அமைதியாக அப்போது மழையும் விட்டது .சரி அத பத்தி அப்புறம் பேசுவோம் என்றாள் .அதான் மழை விட்ருசுல சொல்லு என்றான் .டேய் திரும்ப பெரிய மழை பிடிக்கிறதுக்குள்ள வீடு போயி சேருவோம் வாடா என்றாள் .
சரி நீ சொல்றதும் கரெக்ட் தான் வா போவோம் என்றான் .இருவரும் சிறிது தூரம் நடந்தார்கள் .பின் வழியில் சுவாதி ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி சுடுவதை பார்த்து சுவாதி விக்கியை நிப்பாட்டினாள் .விக்கி விக்கி பஜ்ஜி சாப்பிட்டு போவோமா என்றாள் .எ லூசு நீதானா சொன்ன மழை திரும்ப பெய்ரதுகுள்ள வீட்டுக்கு போனும்னு சொன்ன இப்ப பஜ்ஜி சாப்பிடனும்னு சொல்ற என்றான் .