நண்பனின் காதலி – 4 90

ஹே do you want harlicks என கேட்டாள் ,ம்ம் இருந்தா கொடு என்றான் .பின் அவனுக்கும் ஒரு கப்பில் ஹார்லிக்ஸ் போட்டு குடித்தாள் .பின் அவனும் சோபாவில் அவளோடு உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தான் .எப்ப பால் வாங்க ஆரம்பிச்ச என்றான் .
ஒ இன்னைல இருந்துதான் நைட் அஞ்சலி அக்கா கிட்ட சொன்னேன் இப்படி ரொம்ப நேரம் வாந்தி எடுத்ததா அவங்க சொன்னாங்க பால் குடிச்சா குழந்தைக்கும் நல்லது உனக்கும் நல்லது அப்படின்னு சொன்னாங்க அதான் வாங்குனேன் என்றாள் ,
ஓகே குட் எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .பின் ஆபிஸ்க்கு நார்மாலாக போனான் .
வருண் வந்தான் என்ன பாய் நேத்து என் தம்பியோட பார்ட்டில ஒரு காலேஜ் பொண்ண கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போன மாதிரி இருந்துச்சு என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .இவன் கிட்ட என்னத்த சொல்றது என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பர் பிகரு நல்லா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி .இல்லையே இன்னைக்கும் நீங்க \ஏதோ பொய் சொல்லி மறைக்கிற மாதிரி இருக்கு என்றான் .
அதலாம் இல்ல நீ போயி வேலைய பாரு என்றான் .நான் போறது இருக்கட்டும் இன்னைக்கு வேற கம்பெனில மீட்டிங் இருக்கு அதுனால சீக்கிரம் வாங்க அப்படியே ஆபிசும் 3 மணிக்கு முடிஞ்சுடும் நாம எத ஆச்சும் மாலுக்கு போறோம் என்ஜாய் பண்றோம் என்றான் .
நீ என்னடா எனக்கு மேல வர என்றான் .என்ன பண்ண இன்னும் ஊர்ல இருந்து லவ்வர் வரலையே என்றான் வருண் .சரி நீ போ என்னாளலாம் வர முடியாது என்றான் விக்கி .ஏன் வேற எங்கயும் பிளான் போட்ட்ருக்கிங்களா என்ஜாய் பண்ண என்று கேட்டான் வருண்.
ஒரு பிளானும் இல்ல வொர்க் நிறைய இருக்கு சோ அதலாம் வீட்ல போயி பாக்கணும் .அதுனால இனிமேல் எதுனாலும் வீக் என்ட்ஸ் தான் என்றான் .என்னமோ பண்ணுங்க நான் போ போறேன் என்றான் வருண் .
அங்கு சுவாதி ஆஸ்பத்திரிக்கு போனாள் .வாங்க மிசஸ் சுவாதி என்ன இன்னும் உங்க ஹஸ்பெண்ட் வரவே இல்ல உங்களோட என டாக்டர் கேட்டார் .அவரு வொர்க்ல கொஞ்சம் பிஸி டாக்டர் என்றாள் சுவாதி .ம்ம் சொல்லுங்க இப்ப எப்படி இருக்கு என டாக்டர் கேட்டார் .
அதான் டாக்டர் நேத்து ரொம்ப நேரம் வாமிட் எடுத்தேன் .ரொம்ப சிரமமா இருந்துச்சு என்றாள் .இதே சிரமம்னு சொன்னா எப்படி மிசஸ் சுவாதி இன்னும் குழந்தை பிறக்கிறது இத விட சிரமமா இருக்குமே எப்படி சமாளிக்க போறீங்க என்று டாக்டர் சிரித்து கொண்டே கேட்டார் .
சுவாதி அதற்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்தாள் .ஒன்னும் பயப்படாத எல்லாம் சிரமாமதான் இருக்கும் .ஆனா உன் கையில ஒரு சின்னதா உன் ரத்தத்துல ஒன்னு இருக்கும் அத பாத்த உடனே எல்லா சிரமமும் மறந்து போயிரும் என்றார் டாக்டர் .அதை கேட்ட உடனே சுவாதிக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது .
சரி வாந்தி நார்மலுக்கு மேல அதிகமாத்தான் எடுத்து இருக்கீங்க பூட் ஐட்டத்துல தான் ஏதோ கொஞ்சம் ரஸ்ஸா எடுத்து இருக்கீங்க அதுனால இனிமேல் அதிகமா ப்ருட்ஸ் சாப்பிடுங்க அப்புறம் நான் எழுதி கொடுக்கிற மருந்து எல்லாம் சாப்பிடுங்க என்றார் டாக்டர் .
பின் சுவாதி அந்த மருந்துகளை எல்லாம் வாங்கி கொண்டு வெளியே போகும் முன் திரும்ப வந்தாள் .ஏதோ டாக்டர் கிட்ட கேட்கும் முன் டாக்டரே சொன்னார் தெரியும் நீ என்ன கேக்க போறேன்னு ஸ்கேன்ல உன் குழந்தைய பாக்கணும் அதானே என்று கேட்டார் .சுவாதி வெட்கப்பட்டு கொண்டே ஆமா டாக்டர் என்றாள் .
பின் ஸ்கேனில் அவள் குழந்தையின் அசைவுகளை டாக்டர் காட்ட அதை பார்த்து ரசித்து சிரித்தாள் பின் அந்த மானிட்டரை கையில் தொட்டு கொஞ்சினாள் .