நண்பனின் காதலி – 4 90

ஒரு பக்கம் நைட் புல்லா தூங்கமா இருந்த அலுப்பு இன்னொரு பக்கம் அடிக்கடி அவனுக்கு வந்த சுவாதி முகம் இது ரெண்டும் அவன ரொம்ப இம்ச பண்ணுச்சு ,ஒரு வழியா வொர்க் எல்லாம் கரெக்ட்டா பண்ணி ஒரு மூனு மணி வரைக்கும் சமாளிச்சான் .பின் மீண்டும் டீ பிரேக்கின் போது அவன் லேசாக கண்ணை மூட சுவாதி வாந்தி எடுத்து கொண்டே மூச்சு வாங்கி கொண்டு அவன் கனவில் வர அவன் தீடிக்கிட்டு எழுந்து உக்காந்தான் .
சே ஏண்டி இம்ச என்னையே நிம்மதியா ஒரு ரெண்டு நிமிஷம் கூட கண்ண மூட விட மாட்டிங்குற சரி கனவுல வந்ததுதான் வந்த அட்லிஸ்ட் அந்த மழை துளிய பிடிச்சு விளாண்டிய அப்படி வந்துருக்கலாம்ல ஏன் வாந்தி எடுத்து கிட்டே பாவமா வந்து நிக்குற சரி இருந்தாலும் நீ அப்பதான் அழகா இருக்க என்று நினைத்து கொண்டு பின் விக்கி தன சேரில் உக்காந்தான் .
ஏதோ தோன்றியது போல உக்காந்து யாரும் வருகிறார்களா என்று ஒரு முறை எட்டி பார்த்து விட்டு மெல்ல தன் கம்ப்யூட்டரில் facebook பேஜ் ஓபன் பண்ணான் .அப்படி நீ என்னதான் அழகா இருக்கன்னு நான் பாக்குறேன் என்று நினைத்து கொண்டு பின் அதில் சுவாதி இருக்கும் பக்கத்திற்கு போனான் .
பின் அதில் இருக்கும் அவள் பழைய போடோக்களை பார்த்தான் /.அதை பார்த்து தன்னை மறந்து அவளை ரசித்தான் ,சே இவ எப்பவுமே அழகுதான் என்று அவள் போட்டோக்கள் ஒன்று ஒன்றாக பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் .பின் எதார்த்தமாக அவள் status பார்க்க அதில் அவள் ரிலேசன்ஷிப் சிங்கிள் என்று போட்டு இருப்பதை பார்த்தான்
மேலும் அதில் அவள் அவன் குரூப் விக்கி ,டேவிட் ,மணி ,வள்ளி என்று இவர்களோடு ஒன்றாக நின்று எடுத்த போட்டோ எதுவும் இல்லை .எல்லாத்தையும் நீக்கி இருந்தாள் .அதை எல்லாம் உணர்ந்து புரிந்து கொண்ட அவனுக்கு அப்போது தான் அவள் முன்பு தன் நண்பனின் காதலி ஆக இருந்தது ஞாபகத்திற்கு வர உடனே facebook பேஜை க்ளோஸ் பண்ணான் .
தன் தலையில் கை வைத்து கொண்டு சுவாதியை அவளவு நேரமும் நினைத்தை தன்னை மறந்து அவளை ரசித்தது எல்லாமே நினைத்து ஏதோ அவன் குற்றம் செய்தவன் போல் உணர்ந்தான் .பின் அப்போது டீ பிரேக்ம் முடியவும் அவளை மறந்து விட்டு வேலையை பார்த்தான் .பின் சாயங்காலம் வேலை முடிந்த பின் மணியிடம் சொல்லி விட்டு கிளம்பினான் .
அதன் பின் காரில் ஏறி அவன் வீட்டிற்கு போகும் போது போகும் வழியில் சுவாதியின் ஆபிஸ் பக்கம் வண்டியை நிறுத்தினான் .அவள கூப்பிட்டு போவோமா என்று யோசித்து கொண்டு காரை ஒரு ஓரமாக நிப்பாட்டினான் .
வழக்கம் போல அந்நேரம் அவன் மனசாட்சி வந்து அவனிடிம் பேசியது டேய் உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா இப்ப ஏன் அவள கூப்பிட்டு போகணும்னு நிக்குற என்றது .இவன் பாவம் அவ உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்கன்களா அதான் பாவம் அவள எதுக்கு ஸ்ட்ரைன் பண்ண வச்சுக்கிட்டு போற வழிலதான இருக்கு அவ ஆபிஸ் அதான் அவள கூப்பிட்டு போலாம்னு பாக்குறேன் என்று சொன்னான் .
என்னது பாவமா என்னடா நீ வர வர பாவம் எல்லாம் பாக்குற உனக்கு என்னதான் ஆச்சு ரொம்ப நல்லவனா மாறிகிட்டு வர நேத்து நைட் இருந்து சொல்ற என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ற என்றது மனம் .அவன் தெரியல எனக்கு ஒன்னும் புரியல என்றான் .
என்னது தெரியலையா இப்பதான் அவ யாருன்னு உன் facebook பாக்கும் போது உனக்கு ஞாபகம் வந்துச்சு மறந்துட்டியா என்றது மனம் .இல்ல என்றான் .அவ யாரு என்றது அவன் மனம் என் பிரண்டோட பழைய லவ்வர் என்றான் .அது உன் பிரண்டோட பழைய லவ்வர் அப்படி நினை என்று மனம் சொல்ல விக்கி அப்படியே ஸ்டீரிங்கில் சாய்ந்தான் .பின் அவன் சுவாதியை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .

விக்கி ஸ்டீரிங்கில் சாய்ந்து முதன் முதலில் சுவாதியை பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது .அது ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .

அப்போது எல்லாம் விக்கி டேவிட் மணி மற்றும் வள்ளி என எல்லாரும் அப்போது எப்போதும் ஒன்றாக சனி ஞாயிறு எங்காச்சும் போவார்கள் அப்போது எல்லாம் விக்கிக்கு ஒரு பொன்னை கரெக்ட் பண்ண போகிறான் என்றால்