நண்பனின் காதலி – 4 90

அதுக்கு அப்பரம் எனக்கு வாழ்கையே இல்லைங்கிற மாதிரி ஆகிடுச்சு அப்ப ஒரு வருஷம் சும்மா வீட்லயே கிடந்தேன் என்ன பண்ணறதுன்னு தெரியாம ,சும்மா தண்ணி அடிக்க கஞ்சா குடிக்கன்னு இருந்தேன் .எங்க அப்பா கூட பேசுறதையே நிப்பாட்டிட்டேன்.அவரு கூட மட்டும் இல்ல நான் அப்ப யார் கூடயும் பேசல
வீட்லயும் பித்து பிடிச்ச மாதிரி இருந்தேன் .அப்புறம் எங்க அம்மா ஒரு நாள் என் கிட்ட வந்து இப்படியே இருக்காதப்பா பேசாம மேல் படிப்பு படி அப்பதான் கொஞ்சம் நல்ல இருக்கும்னு சொன்னங்க .
நான் ஒரு change இருக்கட்டுமேன்னு கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல pg செந்தேன் .அங்க போனதுக்கு அப்புறமும் நான் பழைய மாதிரிதான் இருந்தேன் .
யார் கூடயும் சேராம யார் கூடயும் பேசாம ஒரு பைத்தியம் மாதிரிதான் இருந்தேன் .அப்ப ஒருத்தி வந்தா என் வாழ்க்கைல அவதான் இப்ப நான் இப்படி இருக்க நிலைமைக்கு காரணம் என்றான் .
யார் அவ அப்படி என்ன பண்ணா என கேட்டாள் சுவாதி .அவ பேரு லதா அவள வந்து என் கிட்ட பேசுனா நல்லா பழகுனா எனக்கு ஆறுதல் சொன்னா இன்னும் சொல்ல போனா சூர்ய வம்சம் தேவயாணி மாதிரி ரொம்ப தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி பேசுனா இன்னும் சொல்ல போனா அவ கொடுத்த தன்னம்பிக்கைல நான் அப்ப நடந்த செமஸ்டர்ல நல்ல மார்க்ஸ் எடுத்தேன்னே பாத்துகோயேன் என்றான் விக்கி .
ம்ம் Intersting அப்புறம் என்ன ஆச்சு என்று ஆர்வமாக கேட்டாள் சுவாதி .நானும் உமாவோட நினைப்ப மறக்கணும்னு லதா மேல எனக்கு ஒரு காதல் வந்துச்சு என்றான் .ஒ ரெண்டாவது லவ்வா என்றாள் சுவாதி .ஆமா என்றான் விக்கி .அப்புறம் என்ன அவ கிட்ட உன் லவ சொன்னியா என்றாள் சுவாதி .
ம்ம் ரெண்டு பேரும் ஒண்ணா காதலர் தினத்துக்கு அன்னைக்கு சொல்லி எங்க காதல பகிர்ந்து கிட்டோம் .அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப பயங்கரமா காதலிச்சோம் .
நிறைய பேசுனோம் ,நிறைய பழகுனோம் இன்னும் சொல்ல போனா நான் என் முத லவ்வர விட இவள அதிகமா நேசிச்சேன் .ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி எல்லாம் பேசி கற்பனை பண்ணி வாழ்ந்தோம் .எனக்கும் மீண்டும் லைப் எனக்கு திரும்ப வந்த மாதிரி இருந்துச்சு .
நானும் இவள இழந்துட கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் அதுக்காகவே நல்ல படிச்சு சீக்கிரம் வேலைக்கு போகணும்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் . இந்த வட்டம் யார் வந்தாலும் அவள கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் என்றான் விக்கி .அப்புறம் என்ன ஆச்சு என்றாள் சுவாதி .
ஒரு நாள் அது தீபாவளி சமயம் எல்லாரும் ஹாஸ்டல இருந்து லீவுக்கு அவங்க அவங்க ஊருக்கு போயிகிட்டு இருந்தோம் .நான் கடைசி நேரத்துல எங்க ஊருக்கு போற கடைசி பஸ விட்டுட்டேன் .
அதுக்கு அப்புறம் பிரைவேட் பஸ் நிறைய வந்துச்சு ஆனா அது எல்லாம் நிறைய கூட்டம் இருந்தச்சு .சரி காலை பஸ்ல போவோம் கொஞ்சம் கூட்டம் குறைஞ்சு இருக்கும் அப்படின்னு நினச்சு கிட்டு நேரத்த ஓட்டனுமே கோயம்புத்துர்லேயே ஒரு தியேட்டர்ல போயி செகண்ட் ஷோ படத்துக்கு போனேன் .
நான் போன தியட்டர்ல ஒரு இங்கிலிஸ் படம் ஓடுச்சு கூட்டம் அவளவா இல்ல .சரி பாப்போம்னு போயி உக்காந்தேன் .எனக்கு முன்னாடி ஒரு ரெண்டு வரிசை தள்ளி ஒரு ஓரமா ஒரு ஜோடி உக்காந்து என்னஎன்னமோ பண்ணிக்கிட்டு இருந்துச்சுக .எனக்கு இருட்டுல ஒன்னும் தெரியல .
சரி ஏதோ ரெண்டு இளம் சோடிக சந்தோசமா இருக்கட்டுமேனு அதுகள பாக்குறத விட்டுட்டு நான் படம் பாத்தேன் .அப்புறம் ஒரு தடவ எதார்த்தமா நான் அதுக பக்கம் திரும்பணப்பதான் தெரிஞ்சுச்சு அங்க இருந்த ஜோடிலபொண்ணு என் லவ்வர் லதா .