எப்படி காட்டிக் கொடுக்கும்?
வேண்டிகிட்டு ஏந்திய கையிலே வெள்ளைப் பூ விழுந்தா, காரியத்தை முழு மனசா, எந்த வித சஞ்சலமும் இல்லாமே தொடங்கலாமாம். சிவப்பு பூ விழுந்தா எவ்வளவு வாய்ப்பு நமக்கு சாதகமா இருந்தாலும், யார் சொன்னாலும் தொடங்கவே கூடாதாம்.
ரெண்டு கலர் பூவும் ஒன்னா விழுந்துட்டா?
அப்படி இது வரைக்கும் விழுந்ததே இல்லையாம்.
எங்களைக் கடந்து சென்றவர்களின் பேச்சைக் கேட்ட நான் ஒரு முடிவுக்கு வந்து,…..மூல விக்கிரகங்களின் முன் நின்று,…..கை கூப்பி, பக்தியுடன் முக் கடவுள்களை மனதுக்குள் நினைத்து,…
‘தாயே,….தவறோ சரியோ, கண் கண்ட கடவுளாம் கணவனின் ஆசைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இன்னும் தீராத மன சஞ்சலத்துடன் இன்னொரு புதிய உறவுக்காக, இது வரை வந்துவிட்டேன். நான் செய்யப் போவது தவறாக இருந்தால் நீயே அதைத் தடுத்து, என் கணவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து, என்னை இந்த இக்கட்டிலிருந்து மீள வழி காட்டி விடு.
சரி என்றால் அதற்கும் உன் முடிவை இப்போதே சொல்லிவிடு.’ என்று வேண்டி, கண் திறக்க குருக்கள் அர்ச்சனைத் தட்டை என் முன் நீட்டியபடி நின்றிருந்தார். நீட்டிய தட்டிலிருந்து, குங்குமத்தை எடுத்து, நெற்றி நடுவேயும், வகிடின் ஆரம்பத்திலும் வைத்து, ……தாலியை எடுத்து அதற்கு வைக்கப் போகும் சமயம்,…. கோயிலின் உள்ளே ஆராதனை மணி ஒலித்தது.
மற்ற மூவரும் என்ன வேண்டிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.
பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி நடந்து வர, என்னருகே வந்த அர்ச்சனா, “என்னடி மீனா, இங்கே வந்தும் கோயில் கோயிலா சுத்தறே, கடவுள் கிட்டே என்னடி வேண்டிகிட்டே?”
“வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதாம்” என்று அவளுக்கு பதில் சொல்லி, வேண்டுதல் மரத்தின் அடியில் கையேந்தி நிற்க,…. என்னை புரியாத புதிராய் பார்த்தாள் அர்ச்சனா.
‘கொடுக்கவா, தடுக்கவா…. வேண்டுமா, வேண்டாமா’….வேண்டினேன்.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part