அப்ப,,…அவகூட பேசிகிட்டு, எதையாவது சொல்லி சிரிச்சுகிட்டு, அவ கிட்டே சிமிஷம் பண்ணிகிட்டு ட்ராவல் பண்ணுவேன். ஆனா, இன்னைக்கு உன் புருஷன் கூட,…. அண்ணா, அண்ணான்னு சொல்லிகிட்டு ரொம்ப அன்பா பழகுறா. அவ ஆசைய ஏன் தடுப்பானேன்னு விட்டுட்டேன். கல்யாணம் ஆன இந்த பத்து வருஷத்துல அவ யார் கூடயேயும் இப்படி பழகினதில்லை. என்னவோ அவளுக்கு உன்னை மாதிரியே, உன் புருஷனையும் புடிச்சுப் போச்சு.அவளுக்கு ஒரு அன்பான அனுசரனையான அண்ணன் கிடைச்சதுல எனக்கு சந்தோஷம்தான்.”
“அவங்க அண்ணன் தங்கச்சியா பழகுறது உங்களுக்கு விகல்பமா படலையா?”
“இல்லை. அவளுக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. எனக்கும் என் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. உன் புருஷனை அண்ணனா நினைச்சு பழகுறா. பழகட்டுமே! போறப்போ என்னத்தை எடுத்துட்டு போகப் போறோம்? அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.”
“அது சரிங்க…. அண்ணன் தங்கச்சின்னு சொல்லிகிட்டு, புருஷன் பொண்டாட்டியா நடந்துக்கிறாங்களே அது தப்பில்லையா?”
“இருந்துட்டு போகட்டுமே ஊர் உலகத்துல நடக்காததா. இதுல ஒன்னும் தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை? சரி….உங்களுக்கு கூடப் பிறந்தவங்க இருக்காங்களா?”
“அர்ச்சனா ஏதும் சொல்லலையா?”
“ம்..ஹும்”
“எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி இருக்காங்க. அனேகமா அவங்க இப்ப திருச்சியிலே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் அவங்களை விட்டு வந்து பல வருஷம் ஆகுது? நாங்க வீட்டை விட்டு ஓடி வந்ததிலேர்ந்து அவங்க தொடர்பு இல்லை. எங்கே, எப்படி இருக்காங்கன்னும் தெரிஞ்சிக்க முடியலை.”
என் கண்கள் லேசாக கலங்க, அதைப் பார்த்தவர்,” சாரி… உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”
“ பரவாயில்லை. சொந்த பந்தம் இருந்தும், இல்லாதது மாதிரி இருக்கேன்.”
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part