என் உதடுகளைப் பார்த்து, என் நிலையை புரிந்துகொண்டு….. நீங்க அமைதியா இருக்க,….
“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. சும்மா பேசிகிட்டு இருந்தோம். அது சரி. என்னோட புருஷன் கிட்டே இவ்வளவு நேரமா அப்படி என்னடி பேச்சு?!”
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன் கிட்டே சொல்ல முடியுமா?”
“என்னது,… புருஷன் பொண்டாட்டியா?” என்று அவளை அடிக்க கையை ஓங்க,…
“யேய் அடிக்காதேடி,….ஆமான்டி, அவர் உன்னோட புருஷன், நான் இவரோட பொண்டாட்டி. ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம்.
இதைக் கேட்டு நால்வரும் சிரிக்க, அதன் பிறகு பேசிய பேச்சுகள் இங்கே அவசியமில்லாதது
ஹவுரா ஸ்டேஷனிலிருந்து வர varaவர ரயிலின் வேகம் குறைந்திருந்தது. போகப் போக கடலின் மட்டத்திலிருந்து நில மட்டம் உயர்ந்துகொண்டே போனதை அறிந்து கொள்ள முடிந்தது.
மிதமான வேகத்தில் வந்த ரயில் இரயில் ஒரு பெரு மூச்சுடன், க்ரீச் என்ற சப்தத்துடன் மெதுவாக ஊர்ந்து வந்து, ஒரு ஜங்க்ஷனில் நிற்க, கடந்து போன பெயர் பலகையில் GONDA JUNCTION என்றிருந்தது.
அங்கே ட்ரெயின் ஒரு 15 நிமிடம் நிற்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டதால், ட்ரெயினை விட்டு நால்வரும் இறங்கி, கொஞ்ச தூரம் காலாற நடந்து, திரும்ப வந்து, நானும் அர்ர்சனாவும் நம்ம கம்பார்ட்மென்ட்டுக்கு முன்னால் ப்ளாட்பாரத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து,….அந்த இரவு வேளையிலும், .உத்திரப் பிரதேச மாநில மக்களையும், அவர்களின் நடை, உடை, பாவனைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,… நீங்க ரெண்டு பேரும் டிபன் வாங்கப் போய் இருந்தீங்க.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part