நீண்ட பயணம் மேற்கொண்ட அசதியில் பயணிகள் தங்கள் உடமைகளோடு கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கி, அவரவர் இலக்கை நோக்கி, அவரவர் சொந்தங்களோடு போய்க் கொண்டிருந்தனர். பயணிகளோடு, நாமும் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இறங்கி ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தோம்.
ஜில்லென்ற மலைசாரல் காற்று வீச, மலை முகடுகளில் தாழ்வாக வெண் பஞ்சு பொதிகளாய் மேக கூட்டம் நகர்ந்துகொண்டிருக்க, தூரத்தில் நீல வண்ணத்தில் மலைச் சிகரங்கள் மங்கலாகத் தெரிய,…பக்கத்தில் இருந்த பகுதிகள் பச்சை நிற புல் வெளிகளாலும், தாவரங்களாலும்…..பச்சைப் பசேலென்று பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டதைப் போல இருந்தது.
ஆங்காங்கே, இதற்கு முன்னர் பார்த்திராத செடிகள், கொடிகள் பல வண்ணங்களில் பூத்த பூக்களைத் தாங்கி, மிதமான காற்றுக்கு அசைந்து, நம்மை அழைத்துக்கொண்டிருந்தது. மலைத் தாவரங்களிலிருந்து வந்த வாசனைக் கலவை, நறு மணமாய் நாசிக்குள் புகுந்து ஒரு சுகந்தத்தைக் கொடுக்க, மென்மையான குளிர் காற்று மேனியைத் தழுவ,…. பரபரப்பில்லாத அந்தப் பகுதி,…..மனதுக்கு மகிழ்வு தரும் வசந்தமான ஏதோ புதுமையான இடமாக இருந்தது.
ஸ்டேஷனுக்கு வெளியே, மனு மகாராணி ஹோட்டலில் இருந்து, நம்மை அழைத்துச் செல்ல கார் வந்து நின்றிருந்தது.
காரில், நாம நம்ம லக்கேஜ்களோடு ஏறிக் கொள்ள, கார் நைனிடால் டவுனை நோக்கிப் புறப்பட்டது.
சாலையின் இரு பக்கமும், பச்சைப் பேசெலென்ற தாவரங்களின் பின்னணியில் ஓக், சில்வர் ஓக், யூகாலிப்டஸ்,…. இன்னும் என்னென்னவோ இனம் தெரியாத மலைக் காட்டு மரங்கள் அடர்த்தியாய் அணிவகுத்து வானுயர்ந்து நிற்க,… அரை மணி நேர வளைந்து, நெளிந்து சென்ற மலைப் பாதை பயணத்தில், நைனிடால் டவுனை அடைந்தோம். பெரிய நகரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு சிறிய நகரம்தான். சுற்றுலா பகுதியானதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது.
நைனிடால் டவுனின் முக்கிய சாலையும், கடைகள் நிறைந்ததுமான மால் ரோட்டைத் தொட்டு, டவுனிலிருந்து, மேடு பள்ளங்களாய் சாலைகள் வளைந்து நெளிந்து பல்வேறு திசைகளை நீண்டிருக்க, …மேற்கே சென்ற மலைப் பாதையில் கொஞ்ச தூரம் பயணம் செய்து, டவுனை விட்டு தள்ளி இருந்த மனு மகாராணி ஹோட்டலை அடைந்தோம்.
இயற்கை எழில் சூழ, கீழே சிறிதும், பெரிதுமான கட்டிடங்கள், மேடுகளிலும், பள்ளங்களிலும் அமைந்திருந்த நைனிடால் டவுனும், மிதமான சூரிய ஒளியில் பச்சைப் பசேலென்ற நிறத்தில் பள பளக்கும் நைனிடால் ஏரியும், தெள்ளத் தெளிவாகத் தெரியும் உயரத்தில், பக்கம் அமைதியான சூழலில் பணக்காரத் தன்மையோடு மனு மகாராணி ஓட்டல் அமைந்திருந்தது.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part