காரை விட்டு நாங்கள் இறங்க, ஓட்டல் பணியாளர்கள் வந்து பணிவாய் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, நான்கு பேரும் அவர்கள் பின்னால் சென்றோம்.
தனியாக இருந்த இரண்டு சூட் மட்டும் கொண்ட ஒரு தங்குமிடத்திற்கு எங்களை பணியாளர்கள் அழைத்துச் சென்றனர். அறைகளைத் திறந்துவிட்டு, லக்கேஜ்களை வைத்து விட்டு, ‘ஏதாவது தேவையாக இருந்தால் இன்டர்காமில் அழையுங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி, பணிவாக விடை பெற்றனர்.
பத்து பேர் படுத்து உருளும் அளவுக்கு இருபதுக்கு இருபது அடி பரப்பளவில், வெது வெதுப்பை தரக்கூடிய சிம்னியுடன் அறை விசாலமாக இருக்க,…. படுக்கையோ நான்கு பேர் வசதியாக படுத்துப் புரண்டு தூங்கும் வகையில் பெரிதாகவும் மென்மையாகவும் கம்பளிகளோடும், தலையணைகளோடும் இருந்தது. .
24 மணி நேரமும் வென்னீரை தர ஹீட்டர் பொருத்தப் பட்ட, டைல்ஸ் பதிக்கப் பட்ட, சுத்தப் படுத்தப் பட்டு தூய்மையாக இருந்த வெஸ்டர்ன் டாய்லட்டோடு இருந்த தாராளமான குளியலறை, சூட்டோடு இணைக்கப்பட்டிருந்தது.
அர்ச்சனாவும், அவள் புருஷனும் ஒரு அறையில் தங்கள் உடைமைகளை வைத்து தங்கிக் கொள்ள, நாம இன்னொரு அறையில் தங்கினோம்.
இரண்டு அறைகளின் கதவுகள் எதிர் எதிர் திசைகளில் அமைந்திருக்க, இரண்டு அறைகளுக்கும் பொதுவாக ,….கட்டிடத்தின் மையத்தில், நான்கு சோஃபாக்கள் போடப்பட்டு நடுவே பெரிதான டீ பாய் வைக்கப்பட்டிருந்த ஹால் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு முகப்பில் இரண்டு சூட்களுக்கும் பொதுவான மெயின் டோர் இருந்தது. இந்த மெயின் டோரைப் பூட்டி விட்டால் நம்ம இரண்டு அறைக்கு யாரும் வெளியிலிருந்து வர முடியாது.
நாம நாலு பேரும் சோஃபாவில் உட்கார்ந்து, பயணச் சுற்றுலாவை திட்டமிட்டோம். பின்னர் டிபன் வரவழைத்து சாப்பிட்டு விட்டு, பயணக் களைப்பு தீர அவரவர் சூட்களில் படுத்து தூங்கினோம்.
மாலை 3 மணி அளவில் எழுந்து, முகம் கை கால் கழுவி மிதமான மேக்கப் செய்து, நைனா தேவி ஆலயத்தை முதன் முதலாக பார்க்க முடிவு செய்து, காரில் புறப்பட்டோம்.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part