“இல்லையே, அவளை பேர் சொல்லிதான் கூப்பிடுவேன்.”
“அப்புறம் எதுக்கு என்னை மட்டும் வாங்க, போங்கன்னுகிட்டு,…. பேரைச் சொல்லியே கூப்பிடுங்க.”
“சரிங்க மீனா.” என்றவர், என் அதட்டலான பார்வையைப் பார்த்து, ”சரி மீனா” என்றவரைப் பார்த்து புன்னகைத்து, டாய்லெட் போய் விட்டு திரும்ப வந்தேன்.
இன்னும் எதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல என்னை அர்ச்சனாவின் புருஷன் பார்க்க,….
“நைட் என்னாலே சரியா தூங்க முடியலை. அவரும் பாவம் அசந்து தூங்கிட்டு இருக்கார். 8 மணி சுமாருக்கு டிபன் சாப்பிட ஏதாவது ஸ்டேஷன்ல ட்ரெயின் நின்னா எழுப்புங்க.”
“சரி மீனா.”
அரை மணி நேரம் கழித்து, மீண்டும் ரயில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
மக்கள் பரபரப்போட இயங்கிக் கொண்டிருக்க, சமஸ்டிபுர் ஜங்க்ஷன்ல காலை 8.40 மணிக்கு ட்ரெயின் நின்றது.
என் காலை யாரோ தட்ட, திடுக்கிட்டு விழித்த என் எதிரில் அர்ச்சனாவின் புருஷன் பணிவாக நின்றிருந்தார்.
எழுந்து ப்ரஸ் பண்ணிட்டு, முகம் கை கால் கழுவிட்டு ரெடியா இருங்க, நான் டிபன் வாங்கிட்டு வந்திட்றேன்”
“ஆமாம், அர்ச்சனாவும், அவரும் எங்கேங்க?”
“என்ட்ரன்ஸ்ல நின்னு ஏதோ பேசிகிட்டு இருக்காங்க. அவங்க 7 மணிக்கே எந்திரிச்சு காலைக் கடனை முடிச்சுட்டாங்க. உன்னை எழுப்பறேன்னு உன் ஹஸ்பன்ட் சொன்னார். பாவம் அசந்து தூங்குறாங்க, நான் தான் எழுப்ப வேணாம்னு சொல்லிட்டேன்.”
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part