“அவரை டிபன் வாங்கிட்டு வரச் சொல்லவேண்டியதுதானே? உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
“இதிலென்ன சிரமம் இருக்கு? உன் ஹஸ்பன்ட்தான் போய் டிபன் வாங்கிட்டு வர்ரேன்னார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”
அர்ச்சனாவின் கணவர் டிபன் வாங்கி வர, நாம நாலு பேரும் சாப்பிட்டுவிட்டு, மிடில் பர்த்தை மடக்கி வைத்து, ஆளுக் கொரு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து, அதையும் இதையும் பேசியபடி வெளியே வேடிக்கை பார்த்து வர,…. பகல் 1 மணிக்கு ச்சப்ரா ஜங்க்ஷன்ல ட்ரெயின் நிற்க…வழக்கம் போல அர்ச்சனா புருஷன் சாப்பாடு வாங்கி வந்தார்.
.மதிய உணவை முடித்தோம்.
அர்ச்சனாவும் நீங்களும் லவ்வர் மாதிரி சிரித்து சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே வர, …..அர்ச்சனா புருஷன் புத்தகங்களைப் படிப்பதும், வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தார். எவ்வளவு நேரம் தான் நான் தனியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது? உங்களை தொந்திரவு செய்யவும் மனம் வரவில்லை.
“என்னங்க,….”
“என்னையா மீனா?”
“ஆமாம் . உங்களைத்தான். எப்பவுமே ட்ராவல்ல இருக்கும் போது இப்படிதான் புத்தகத்தை படிச்சிகிட்டே இருப்பீங்களா?”
“இல்லை மீனா. தனியா ட்ராவல் பண்றப்போ புத்தகம் தான் எனக்கு துணை. மத்தவங்க மாதிரி, பக்கத்திலே உட்கார்திருக்கிறவங்ககிட்டே அரட்டை அடிக்கத் தெரியாது. மத்தவங்க கிட்டே பேசி பழகறதுன்னாலே எனக்கு கொஞ்சம் கூச்சம்தான். ஆனா, அர்ச்சனா வர்றதா இருந்தா கார்லதான் வருவோம்,… போவோம்.
Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part