செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 4 149

டிபன் வாங்கி வந்து நான்கு பேரும் சாப்பிட்டதும், உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்களைச் சுழற்ற பர்த்தை இறக்கி படுக்கை தயார் செய்து அவரவர் இடத்தில் படுத்தோம்.

பாலங்களையும், பள்ளத் தாக்குகளையும், காடுகளையும், கணவாய்களையும் இரயில் மிதமான வேகத்தில், நிசப்தமான இரவில் தட தடத்து கடந்து கொண்டிருக்க,….. அர்ச்சனாவின் புருஷன் பேசிய பேச்சும், நடந்து கொண்ட விதமும் மனத் திரையில் ஓட,….எண்ணிப் பார்த்தேன். அவரின் ஆசை இயல்பாகவே தெரிந்தது எனக்கு.

நிதர்சனமாக நிறைவேறாது என்று தெரிந்தும், மனிதர்களின் மனங்களில்தான் எத்தனை அந்தரங்க ஆசைகள் புதைந்து கிடக்கிறது? சுய கட்டுப்பாடோ, சமூகக் கட்டுப் பாடோ, அமைபுக் கட்டுப் பாடோ,…. ஏதோ ஒன்று, மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனதையும் திறந்து படிக்க,…. பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ ஆசைகள் அவனுள் கொட்டிக் கிடப்பதை அறிந்து கொள்ள முடியும். கேட்டு, அவமானப் பட்ட ஆசைகள், கேட்காமலே மனதிலேயே புதைத்துக் கொண்ட ஆசைகள், நிறைவேறாத அநியாமான ஆசைகள். இப்படி எத்தனையோ!….

இப்படி என்னென்னவோ நினைத்துக் கொண்டு படுத்திருக்க, எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அதி காலையில் கண் விழித்த போது, இரயில் ராம்புர் ஸ்டேஷனை வந்தடைந்திருந்தது. பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. காபி குடித்து, காலைக் கடன்களை முடித்து, வேறு உடை அணிந்து கொண்டோம்.

நான்கு மணி நேர பயணத்துக்குப் பிறகு, இரயில் உத்ரகான்ட் மாநிலம் லால் கான் ஜங்க்ஷன் வந்து சேர்ந்தது.

மீண்டும், மேடாக இருந்த மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்த இரயில், காலை 9.30 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் உயரத்தில் இருந்த, கத்கோடம் ஸ்டேஷனை வந்தடைந்தது. கடைசி ஸ்டேஷனும் இதுதான்.

5 Comments

  1. Supr next week please 5

    1. Hi radha

  2. Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga

  3. Next part pls

  4. Next part

Comments are closed.