உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

அலமாரியிலிருந்த மூவை எடுத்து வந்து. . அவள் கால் மாட்டில் அமர்ந்தான். மெதுவாக அவள் காலைத் தொட்டு.. அவளது புடவையை சற்றே மேலேற்றினான். பொன்னிறக் கால் பளிச்சிட்டது. மூவை பிதுக்கி அவள் கால் நரம்பு சுளுக்கிய இடத்தில். . நன்றாகத் தடவினான்.
” கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க ஆண்ட்டி” என்றான்.

மிருதுளா பின்னால் நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.
”அந்த டிவிய போட்டு விடு..! கொஞ்ச நேரம் பாக்கலாம்..”

நந்தா எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துவிட்டு வந்து. . அவள காலருகே உட்கார்ந்து.. மெல்லப் பிடித்து விட்டான். சிறிது நேரத்தில்..
” போதும்பா விடு..” என காலை நகர்த்திக் கொண்டாள்.

ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்..
” சரி நடப்பா.. டிபன் ரெடி பண்ணலாம்..” என கட்டிலிலிருந்து நகர்ந்து இறங்கி.. மெதுவாக கால்களை ஊன்றி.. நடந்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி”
” இப்ப பரவால்ல.. வா..” என முன்னால் நடக்க.. அவனும் எழுந்து போனான்.

தோசைதான் ஊற்றினாள்.! நந்தா தேங்காய் சட்னி அரைத்தான்.! இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மறுபடி அவளது படுக்கையறைக்குள் போக..
” இவ்ள நேரம் நின்னதுல மறுபடி கால் வலிக்குதுப்பா ” என்றாள் மிருதுளா.
” சரி உக்காருங்க… மறுபடி மூவ் போடலாம்..! ” என்றான்.

கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டாள். அவளது காலை எடுத்து மடியில் வைத்து. .. மூவைப் போட்டு.. இதமாகத் தடவிவிட்டான். மேலும் அரைமணிநேரம்.. கழித்து..
”எனக்கு தூக்கம் வருதுப்பா..! நீ டிவி பாத்துட்டு. .. ஆப் பண்ணிட்டு போயிரு.. நான் தூங்கறேன்..” என்றாள்.
” சரி ஆண்ட்டி. . நீங்க தூங்குக்க.. இப்ப கால் வலி எப்படி இருக்கு..?”
”ம்.. பரவால்ல..! ஆனா காலைலதான் எப்படி இருக்கும்ன்னு தெரியல..” என்றாள்.
” டாக்டர்கிட்ட போகனுமா..?”
” அந்தளவுக்கெல்லாம்.. ரொம்ப இல்ல. .! என்ன கொஞ்சம் நொண்டியடிக்கனும். .” எனச் சிரித்தாள்.
” படுங்க. .. நா வேணா.. காலமுக்கி விடறேன்..”

படுத்துக்கொண்டாள் மிருதுளா. அவள் கால்களைப் பிடித்து விட்டான் நந்தா. அவளின் இரண்டு கால்களையும் நன்றாக பிடித்து அமுக்கி விட..
” போதும்பா..விடு..” என்றாள்.
” நீங்க. . தூங்குங்க பேசாம. .” என்றான்.

புன்னகையுடன் டிவியைப் பார்த்துப் படுத்தவள்.. அசதி காரணமாகவோ.. என்னவோ.. அப்படியே தூங்கிவிட்டாள். கெண்டைக்கால்வரை அவள் புடவை ஏறியிருக்க… அவள் கால்களின் அழகை ரசித்துப் பார்த்தான் நந்தா. அவள் கால்களில் இளமை இல்லை. ஆனால். . தோலின் மென்மையில் கவர்ச்சி இருந்தது.!
‘ எத்தனை அழகான பாதங்கள்?’ என வியந்தான்.
‘ அவளின் இளமையில் இதே இந்தப் பாதங்களும். . கால்களும் எத்தனை அழகாக இருந்திருக்கும்..? ‘

இந்தத் தோல் இன்னும் சில வருடங்களில் வறட்சித் தண்மை பெற்று சுருங்கிப் போகலாம்..! ஆனால். . இன்னும் எத்தனை வழவழப்பாக… மிருதுவாக இருக்கிறது.? வெண்மையான பாதங்களில் .. மிகச் சிறிய பித்தவெடிப்புக்களின்.. ரேகை தெரிந்தது. பாதத்தின் மேற்புரம்.. விரல்களை நோக்கி. நீண்ட. . நரம்புகள் லேசாகப் புடைத்துக்கொண்டிருந்தன.! கால் விரல் நகங்களைச் சுத்தமாக வெட்டி.. நாவல் நிறச் சாயம் பூசியிருந்தாள்.! கால் விரலின்.. வெள்ளி மெட்டிகள்.. தனி அழகுடன் மிளிர்ந்தன.. !!

நன்றாகத் தூங்கிவிட்டாள் மிருதுளா. ஆழ்ந்து தூங்கும் அவள் தூக்கம் கலைந்து விடாமல் இருக்க. . டிவி சத்தத்தை மிகவும் குறைத்து வைத்தான் நந்தா. கால்களிலிருந்த கையை விலக்கி.. புடவையைக் கீழே இழுத்து விட.. திடுமென ஒரு பெருமூச்சு விட்டு வலப்பக்கமாகப் புரண்டு படுத்தாள்.

அப்படிப் புரண்டு படுத்ததில் அவளது முந்தானை ஒதுங்கியது. கொஞ்சம் தொளதோளவென இருந்த ரவிக்கைக்குள் சிறைபட்டுக் கிடந்த மிருதுளாவின் இடப்பக்க மார்பகம் பளிச்செனத் தெரிந்தது.!

நிதானமாக அவள் மார்பை ரசித்தான் நந்தா. இனம் புரியாத ஒரு உணர்ச்சி அவன் மனதில் எழுந்தது. அவள்மீது அவனுக்குப் பாலுறவு ஆசையெல்லாம் எதுவும் இல்லை. ஆனாலும் அவளிடம் ஏற்பட்ட வாஞ்சை.. அவனை ஈர்த்தது. அவளது மார்பில். . இளமையின் புடைப்போ.. விடைப்போ இல்லை. !

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.