உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 150

உண்மையிலேயே.. அவன் சொன்னதைக் கேட்டுப் பூரித்துப் போனாள். அவளது மகிழ்ச்சி மனம் நிறைந்த சிரிப்பில் தெரிந்தது.

நந்தா மேலும் சொன்னான்.
”என்னோட சின்ன வயசுல இருந்தே.. உங்களப் பாக்கறப்ப.. எனக்குள்ள.. ஒரு பிரம்மிப்பு வரும் ஆண்ட்டி.! உங்க மேல அத்தனை மதிப்பும்.. மரியாதையும். . இருக்கு எனக்கு. .”
”ம்கூம். .?” புன்னகை.
” எனக்கு. . உங்ககிட்ட. . ரொம்பப் புடிச்சதே.. உங்களோட எளிமையான மனசும்.. அடுத்தவங்களுக்கு.. உதவற உங்க குணமும்தான் ஆண்ட்டி. ஒரு சிறந்த ஆசிரியைக்கு.. இருக்கற எல்லா குணமும் உங்ககிட்ட இருக்கு. நிச்சயமா அது போற்றப்பட வேண்டிய விசயம்தான் ஆண்ட்டி. உங்க நேர்மைக்காக உங்களுக்கு ஜனாதிபதி அவார்டே தரலாம்.! கிடைக்கும்! எனக்கு நம்பிக்கை இருக்கு.! ஒரு மிகச்சிறந்த நேர்மையான ஆசிரியைன்ற விருது உங்களுக்கு கிடைக்கத்தான் போகுது. வேணா பாருங்க. .!” என்றான்.

அப்படியே உருகிப் போனாள் மிருதுளா. அவன் சொன்ன புகழ் மொழிகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தாள்.
ஆனாலும்..
”நீ பேசறது ரொம்ப ஓவர் நந்தா. .! நா ஒண்ணும் அந்தளவுக்கு. …”
” இது உங்க தன்னடக்கத்தைக் காட்டுது ஆண்ட்டி. இதான் உங்க குணம்.! உங்கள புரிஞ்சிக்க முடியாதவங்க.. அவங்க வாழ்க்கைல.. நெஜத்தை மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம். .! நா உங்கள மிஸ் பண்ண மாட்டேன்”
” போதும் நந்தா. ! எனக்கு தாங்கல..” என அருகில் வந்து. . கட்டிலில் அவனோடு இணைந்து உட்கார்ந்து அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.

அதில் அவளின் அன்பையும். . பாசத்தையும் நன்றாகவே உணர்ந்தான். உரிமையோடு அவளின் மென்மையான விரல்களைக் கோர்த்துப் பின்னிக்கொண்டான். அவன் தோளில்.. அவள் தோளைச் சாய்த்துக் கொண்டு. . உண்மையான அன்போடு மெல்லிய குரலில் சொன்னாள்.

” ஐ லவ் யூ.. நந்தா. ..!!”

விடுமுறை நாள்..! ஆனாலும் வழக்கம் போல எழுந்து. .. நடை பயிற்சி.. உடற்பயிற்சி.. எல்லாம் முடித்துக்கொண்டு. . சமையல் கட்டுக்குப்போய்… மிருதுளாவுக்கு உதவி செய்தான் நந்தா.

” என்ன புரோகிராம் நந்தா.. இன்னிக்கு. .?” என அவனிடம் கேட்டாள்.
” சொல்லிக்கற மாதிரி ஒன்னுல்ல ஆண்ட்டி. .” என மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.
” அப்ப. . வேற என்னதான் பண்ணப்போற…?”

யோசித்துப் பார்த்தான். உருப்படியாக ஒன்றும் தோண்றவில்லை.
” என்ன பண்றது..? புல் ரெஸ்ட்தான் ஆண்ட்டி. .” என்றான்.
” ஒரு நாள் முழுசுமா..?”
” ம்..ம்…! ”தோள்களைக் குலுக்கினான் ”ஒரு நாள் என்ன ஒரு நாள். . ? ஏன் நீங்க இல்லை. .?”
” ஸாரி நந்தா. .” என்றாள்.
” ஏன் ஆண்ட்டி. .?”
” எனக்கு.. இன்னிக்கு வேறொரு புரோகிராம் இருக்கு”
” இட்ஸ் ஆல் ரைட் ஆண்ட்டி. .! நா வீட்லதான இருக்கப் போறேன்..! நீங்க போய்ட்டு வாங்க..”
அருகில் வந்து.. அவன் கையை எடுத்து.. அவள் கைக்குள் வைத்துக்கொண்டாள்.
” ஒன்னு பண்ணேன்..”
” என்ன ஆண்ட்டி. .?”
” சினிமா போயேன்..! போரடிக்காம இருக்கும்..”
சிரித்தான்.
”தேங்கஸ் ஆண்ட்டி”
” போறதான..?”
” ம்..!” தலையாட்டினான்.
” உன்னை தனியா விட்டுட்டு போக மனசில்ல.. அதான். .! எப்படியும். . நான் வரதுக்கு… சாயந்திரம் ஆகிறும். .”
” பரவால்ல ஆண்ட்டி. .! நீங்க மெதுவாவே வாங்க…”
” எல்லாம் சமைச்சு வெச்சிட்டு போறேன்.! மறக்காம சாப்பிடனும் என்ன. .? நான் வந்து பாக்கறப்ப.. எதுவும் மிச்சம் இருக்கக்கூடாது..” என்றாள்.

ஆனால் அவள் எங்கே போகிறாள் என்று அவளும் சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. !

பத்து மணிக்குப் புறப்பட்டுப் போனாள் மிருதுளா. அதிக மேக்கப் இல்லாத.. அவளது எளிய தோற்றம்.. அவளது அழகின் கம்பீரத்தை வெளிக்காட்டியது.!
மதியக்காட்சி.. சினிமாவுக்குப் போனான் நந்தா. விடுமுறை நாள் என்பதால் நனாறாகவே கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாகப் படம் பார்த்துவிட்டு.. அப்படியே ஷாப்பிங் பண்ணினான். அவனுக்கு ஜீன்ஸ் பேண்டும். . டீ சர்ட்டும் எடுத்தான்.! ஆண்ட்டிக்கும் நல்லதாக ஒரு புடவை வாங்கினான்.!!

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.