உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

” ம்..ம்..! உங்ககிட்டேர்ந்து நெறையக் கத்துக்கனும். .” என்றுவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.

இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான். மிருதுளா மெல்லிய குரலில் கேட்டாள்.
” நெஜமா.. நான் இன்னும்.. இளமையா… அழகா இருக்கறனா… நந்தா. .?”

லேசான வியப்புடன் அவள் முகம் பார்த்தான். உதடுகள் விரியச் சிரித்தான்.
” அழகா மட்டுமில்ல… சூப்பர் பிகராவும் இருக்கீங்க..! இப்பக்கூட தெருவுல நீங்க நடந்து போனா… பலபேர் உங்கள சைட் அடிப்பாங்க..”
”நாட்டி… பாய்..” எனச் சிரித்தாள்.
அவளது முகத்தை ஆவல் பொங்கப் பார்த்தான்.
”என்ன. .?” மெலிதான புன்முறுவலுடன் கேட்டாள்.
கண்களைச் சிமிட்டிச் சொன்னான்.
” ஐ லவ் யூ.. ஆண்ட்டி. .”

நந்தா அப்போது சிறுவனாக இருந்தான். அப்போதைய அவனது வயதுகூட.. இப்போது சரியாக நினைவில் இல்லை. அனேகமாக.. எட்டோ.. அல்லது ஒண்பதாகவோ இருக்க வேண்டும்.! அவனது தந்தை…அவனுடைய நாலாவது வயதிலேயே இறந்து விட்டதாக அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது அப்போது ஒரு நாள். .! அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக நினைவு..!

இந்த ஆண்ட்டியின் கணவர்.. ராஜகிருஷ்ணன்.. அஙகு வந்திருந்தார். உடல்நலமில்லாத அம்மாவைப் பார்ப்பதற்காக…!? நிறையத் திண்பண்டங்கள்.. பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அவனுக்கும். . அவனது அண்ணனுக்கும் ரிமோட் கார்கள்கூட வாங்கி வந்திருந்தார். !

அன்று அவனது அம்மாவும். . அவர்களிடம் அளவுக்கதிகமான அன்பைக் காட்டியதாக.. அவனுக்கே தோன்றியிருந்தது.
அன்றைய இரவு..! விளையாடிக் களைத்து. . அவனும்… அண்ணனும் எப்போது தூங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்.. தூக்கத்தினிடையே ஒரு சமயம் விழித்துக் கொண்டபோது.. வலப்பக்க அறையிலிருந்து. . அவன் அம்மாவின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

முதலில் அது.. கனவில் கேட்பது போலிருந்தது. உற்றுக்கேட்ட பின்னர்தான் தெரிந்தது.. அது அழுகுரல் என்று..! அவர்கள் பக்கத்தில் அம்மாவைக்காணவில்லை. அண்ணன் வாயில் ஜல் ஒழுகத் தூங்கிக்கொண்டிருந்தான்..!

அழும் குரல் அம்மாவுடையது எனப் புரிந்து. . அவன் எழுந்து.. தடுமாறி.. வலப்பக்க அறைக்குப் போனபோதுதான் அந்தக்காட்சியைப் பார்த்தான். அவனுடைய அம்மா. .. அங்கிளின் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். அவரும். . அம்மாவை அணைத்து உட்கார்ந்து. .. அவளுக்கு ஆறுதல் சொன்னவாறு… அவளது தோளை நீவிக்கொண்டிருந்தார்.

விபரம் அறியாமல்..அவன். . அறை வாயிலில் நின்று..
” அம்மா. .” எனக் கூப்பிட… அவர்கள் இருவரும். . பதறியடித்துத் திரும்பிப் பார்த்தனர்.

உடனே அவர்கள் விலகினர். அப்படி விலகிய போதுதான்.. அவன் இன்னொன்றையும் கவனிக்க நேர்நதது. ஜீரோ வாட்ஸ் பல்ப்பின் மங்கலான வெளிச்சத்தில்.. அவன் அம்மாவின்… ரவிக்கைக் கொக்கிகள்.. விடுபட்டிருந்தன..! ஆயினும். .. அப்போது.. அதன் முழு அர்த்தமும் புரியவில்லை அவனுக்கு. .!

உடனே எழுந்து வந்த அம்மா. . அவனை… பாத்ரூம் அழைத்துப் போய் வந்து. . பக்கத்தில் படுக்கவைத்து. .. அணைத்து. .. தடவிக் கொடுத்து. .. தூங்கவைத்துவிட்டதாக நாபகம்.!!

அதன்பிறகு… அந்த நினைவு அவ்வப்போது அவனுக்கு வந்து போகும். ..! ஆனால் அதன் அர்த்தம் முழுமையாகப் புரிந்ததென்னவோ… அவனுக்கு மீசை முளைத்த பின்னர்தான்..!!

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த நந்தாவின் எண்ண ஓட்டங்கள். . பல வருடங்கள் பின்னோக்கிப் போயிருந்த. . அந்த இரவு வேளையில்தான். . சத்தமின்றி அறைக்குள் நுழைந்தாள் மிருதுளா ஆண்ட்டி. !

சிகரெட் புகை .. அவனது தலைக்குமேல் மண்டலமாகச் சுழன்று கொண்டிருந்தது. சிகரெட் புகை ஒத்துக்கொள்ளாததால்…
” கெக்… கெக்..” கென இருமினாள்.

அவளது இருமலைக்கேட்டு.. சட்டெனத் திரும்பினான். உடனடியாக சிகரெட்டைத் தூக்கி ஜன்னல் வழியாக வீசினான்.
” ஸாரி ஆண்ட்டி. .” தடுமாற்றத்துடன் எழுந்து. . மின்விசிறி சுழற்சியை அதிகப்படுத்தினான்.
” எ..என்..ன .. பழக்கம் இது..?” இருமலுக்கிடையே கேட்டாள்.
”ஸ.. ஸாரி. ..”

நறுக்கென அவன் தலையில் கொட்டினாள். அவன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரிக்க. . அவனது காதைப் பிடித்துத் திருகினாள்.

” வெரி… வெரி.. ஸாரி ஆண்ட்டி. .”
” நோ..! இதுக்கெல்லாம் மன்னிப்பே கெடையாது..” காதை பலமாகத் திருகினாள்.

காது வலித்தது. மறுபடி தலையில் கொட்டி… திட்டினாள். ஒரு பள்ளி மாணவனைப் போலவே.. அவனையும் நடத்தினாள. அது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.