உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

” எங்க. .?”

ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள். அதேநேரம் அவனைத்தேடி வந்த மிருதுளா.. அறைக்குள் நுழைந்தாள்.. !!

அந்தப் பெண் உடனே மிருதுளாவைப் பார்த்து.. சிரித்தபடி..
”ஹலோ ஆண்ட்டி. . குட் ஈவினிங்..” என்றாள்.
” குட் ஈவினிங்..! என்ன பண்ணிட்டிருக்கே நீ..?” என மிருதுளா ஜன்னல் ஓரமாகப் போய் நின்றாள்.
” உங்க நந்தா வோட டாக் பண்ணிட்டிருக்கேன். நந்தா உங்க கஸினா..?”
” ஆமா. .” என்றவள் உடனே நந்தாவிடம் திரும்பிச் சொன்னாள் ” நந்தா இந்த பொண்ணு இருக்கே… பூரணி. சரியான வாயாடி..! இது வாயாடி மட்டுமில்ல.. வாலும் கூட..! அவகிட்ட கவனமா இரு இல்லேன்னா உன்ன ஒரு வழி பண்ணிருவா..”
” ஹலோ. .. ஹலோ. .. ஆண்ட்டி.! அனியாயமா என்னை கெட்டவளா மாத்திடாதிங்க..! ” என்றுவிட்டு உடனே அவனிடம் சொன்னாள் ”நந்தா… ஆண்ட்டி சொல்றத நம்பாதிங்க..! நான் ரொம்ப. . ரொம்ப நல்ல பொண்ணு..! யாரோட வம்பு தும்புக்கும் போக மாட்டேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு.. இருக்கற.. ‘ காம் ‘ டைப் நானு”

நந்தா சிரித்து..
”அதாவது என்னை மாதிரி..” என்றான்.
” அப்கோர்ஸ்..” என்றவள் உடனே ”யூ.. மீன்..?”
”நானும் உங்கள மாதிரிதான் காம் டைப்..”
” என்ன ஒற்றுமை பாத்திங்களா நமக்குள்ள..? இதான் நந்தா கடவுள் செயல்ன்றது..! ஒரே மாதிரியான நம்ம ரெண்டு பேரை மீட் பண்ண வெச்சு. ..”
” அம்மா பூரணி. ..” ஆண்ட்டி இடை புகுந்தாள். ”போதும்மா.. நீ ரொம்ப தங்கமான பொண்ணுன்னு.. இந்த ஊருக்கே… இல்லல்ல.. நாட்டுக்கே தெரியுமே..! அத நீ வேற தனியா சொல்லனுமா என்ன. .?”
” ஹ்ஹா. .! தேங்க்ஸ் ஆண்ட்டி. .பட் ஒன் திங்க்.. என் பேரு அம்மா பூரணி இல்ல. . அன்ன பூரணி..!! உங்க நந்தா என்னடான்னா.. தாரிணின்றாரு..! நீங்க அம்மா பூரணின்றீங்க…! என் பேரு எனக்கே மறந்துரும் போலிருக்கு..” என்றாள்.
” அதெப்படி.. உன்னால மட்டும் முடியுது. ..?” எனக் கேட்டாள் மிருதுளா.
” என்ன ஆண்ட்டி. .?”
” மூச்சு விடாம படபடனு பேசறியே…! வாய் வலிக்காது?”

சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல்
”அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி. .” என்றாள்.
நந்தா. ” ஆனா. . உங்க பேச்சும் உங்கள மாதிரியே.. அழகா இருக்கு..” என்றான்.

மிருதுளா ”இந்தப் பொண்ணுகிட்ட இப்படி பேசாத நந்தா. . மாட்டிப்ப..” என்றாள்.

பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
நந்தா ”என்ன தப்பு. .? உண்மையத்தானே சொன்னேன்.”

அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” நீ பேசல.. உன் வயசு பேசுது..”
” ஹா..! என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”
நகைத்தாள் மிருதுளா.

நந்தா ” நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது.! அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து ”பாட்டு கத்துக்கறீங்களா.. பூரணி. .?” எனக் கேட்டான்.
” நானா.. இல்லையே..! நீங்க கத்து தர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றாள் குரலை சரி பண்ணிக்கொண்டு. . ஹம் பண்ண. . மிருதுளா அவசரமாக
” சரி.. சரி. போதும் விடு..” என்றாள்.
”அதெப்படி..? பட்… ஆண்ட்டி ஒரு விசயம் கவனிச்சீங்களா?”
” இல்லம்மா.. நீயே சொல்லிறேன். ”
”நந்தா எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு..! அப்படித்தான நந்தா. .?”
” நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
” நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. .! நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
”நிச்சயமா நீங்க வருவீங்க..ட்ரை பண்ணா..! அவ்ளோ இனிமையானது உங்க குரல். ”
”தேங்க்ஸ்..! பட் நந்தா. . உங்கள எனக்கு புடிச்சிருக்கு..” என்றாள்.

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.