உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 150

அவன் வீடு போனபோது.. மிருதுளா வந்திருந்தாள். கதவைத் திறந்த மிருதுளா.. அவனைச் சிரித்த முகமாக வரவேற்றாள். அவன் கையிலிருந்த.. பேகைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” என்ன இது..?”
” ஷாப்பிங் பண்ணேன் ஆண்ட்டி. .”
” அப்படியா…? குட்.” கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டாள். ”என்னெல்லாம் வாங்கினே..?”
” ட்ரஸ்ஸஸ் மட்டும்தான் ஆண்ட்டி. .”
” எடேன் பாப்போம்..”

வெளியே எடுத்துப் புடவையை அவளிடம் கொடுத்தான்.
”நல்லாருக்கா பாருங்க..”
” அட… புடவையா..?” என வியப்புடன் வாங்கினாள். விரித்துப் பார்த்து.. ”வாவ்.. வெரி நைஸ்..! யாருக்கு இது.. உன் அம்மாக்கா..?” எனக் கேட்டாள்.
புன்னகையுடன் சொன்னான்.
”உங்களுக்குத்தான் ஆண்ட்டி..”

குப்பென அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பூத்தது. சந்தோசத்தில் பூரித்தாள். கண்களில் பரவசம் பொங்கியது.
”ஓ..! தேங்கஸ் நந்தா. .”
” புடவை புடிச்சிருக்கா ஆண்ட்டி. .?”
” இது மாதிரி. . புடவை ஒன்னு நானே எடுக்கனும்னு நெனச்சிட்டிருந்தேன்..! பட் நீ எடுத்துக் குடுத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம்..”

அவனது பேண்ட்.. சர்ட்டையும் எடுத்து. . அவன் நெஞ்சில் வைத்துப் பார்த்து..நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.
” சரி போய் முகம் கழுவிட்டு. . துணி மாத்திட்டு வா.. சூடா காபி குடிக்கலாம்..” எனச் சொன்னாள்.
” நீங்க எப்ப வந்தீங்க ஆண்ட்டி?”
” இப்பதான்.. கால்மணிநேரம் ஆகிருக்கும்..”

மாடியறைக்குப் போனான். அறைக்குள் நுழைந்து. . ஜன்னல் கதவைத்திறக்க… அப்போதுதான் அவளைப் பார்த்தான்.
எதிர் வீட்டு மாடி ஜன்னலில்.. அழகான ஒரு இளம்பெண் முகம்.. தெரிந்தது. !
பார்த்தவுடன் ‘பச்சக்’ என மனதில் ஒட்டிக்கொள்ளும் முகம்.! அவளது கருவண்டு விழிள் அவனைக் கண்டதும்… உடனே சினேகித்தது.!

”ஹலோ ” சொன்னான்.
அவளும் தயங்காமல்.. உடனே..
”ஹலோ. .” சொல்லிச் சிரித்தபோது இன்னும் அழகாகத் தோன்றினாள்.
”நான் நந்தா. .” என்றான்.
கண்களைச் சிமிட்டி..
”பூரணி.” என்றாள்.

குரல் இனிமையாகவே இருந்தது.
” ஸ்வீட் நேம்..! அதைவிட.. உங்க வாய்ஸ்…ஸ்வீட்டா இருக்கு..” எனக் கொஞ்சமாகக் கத்திச் சொன்னான்.
” ஆ..! எங்கூட பேச ஆசப்படறீங்கன்னு தெரியுது.. அதுக்காக இப்படி ஐஸ் வெக்கனுமா என்ன. ?” எனக்கேட்டுச் சிரித்தாள்.
”ஐயோ நெஜமாதாங்க தாரிணி. ப்ராமிஸ்..”
” பாத்திங்களா… அதுக்குள்ள ஆள மாத்திட்டிங்க .?”
”ஆள மாத்திட்டனா… ? என்ன சொல்றீங்க..?”
” என் பேரு என்ன. .? மறுபடி சொல்லுங்க பாப்பம்..?”
” தாரிணி. .தானே..?”
” பூரணி..! அன்னபூரணி..! தாரிணி இல்ல. .!”
” ஓ..! எக்ஸ்ட்ரீம்லி…”
”ஸாரியா..?”
” ம். ம்..! ஒரு சின்ன தவறு நடந்துருச்சு..! உங்க. . அழகும். .குரலும். . என் கவனத்த.. மிஸ் பண்ண வெச்சிருச்சு..! பூரணி. . சரிதானே..? அன்னபூரணி. .?”
” கரெக்ட்..” என்றாள். ”என்ன.. மிருதுளா ஆண்ட்டியோட கெஸ்ட்டா நீங்க. .?”
” ஆ.. ஆமா. .”
” படிக்கறீங்களா…?”
” வேலைல இருக்கேன்..”
” என்ன வேலை. .?”
” ஈ பீ ல..” என விபரம் சொன்னான். ”நீங்க. .?”
” வொர்க்கிங்..?”

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.