இடை அழகி மேடம் சங்கீதா 15 69

உள்ளே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சர்யம்.. எதோ கேரளாவில் உள்ள வீட்டினுள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவனுக்கு.. உள்ளே நுழைந்த தருணத்தில் நல்ல சந்தன வாசம் வீசியது.. பெரிதாய் இல்லாமல் சிறிதளவில் ஜன்னல்களும், அதன் வழியே ஒரே நேர் திசையில் வெள்ளை நிற ஸ்க்ரீனை தாண்டி தரையில் விழுந்து கொண்டிருக்கும் சூரிய வெளிச்சமும், அடக்கமான சிறிய வீடாக இருந்தாலும் ஒவ்வொரு மூலையிலும் சின்ன சின்ன தொட்டிகளில் இரண்டடிக்கு வளர்ந்த செடிகள் அந்த சூரிய வெளிச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதும்.. சின்ன பால்கனியில் மேலிருந்து தொங்கும் சிறிய பூந்தொட்டிகளும், சுவர் முழுக்க மரங்களால் அலங்காரம் செய்யபட்டு நடு நடுவே சிறிய ஃப்ரேமில் நிறைய ப்ளாக் & ஒயிட் ஃபோட்டோக்களில் தெத்துப்பல் தெரிய தன் அப்பாவின் இடுப்பில் அமர்ந்து அழகாய் சிரித்துக்கொண்டிருக்கும் குட்டி சஞ்சனாவையும் பார்த்து, நிற்கும் இடத்திலேயே அவளது வீட்டின் வசீகரத்தில் மனம் லயித்து தன்னையும் மறந்து அனைத்தையும் ஒரு நிமிடம் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக். “ஹஹ்ஹா… ஹேய்.. என்னடா ஆச்சு?.. அப்படியே ஒரைஞ்சி நிக்குற?.. உட்கார மாட்டியா?” – சஞ்சனா காஷுவலாக கேட்டாள்.. “இல்ல சஞ்சு… இது வந்து..”

“ஹ்ம்ம்… இது வந்து….?” “ரொம்ப வித்யாசமா இருக்கு.. உள்ள வந்துட்டா திரும்பி வெளிய போக பிடிக்குமான்னு தோனுற அளவுக்கு இருக்கு உன் வீடு..” “ஹ்ம்ம்.. அப்படி ஒரு ஃபீலிங் குடுத்தாதான் அது வீடு.. இல்லன்னா என்ன பொறுத்த வரைக்கும் அது வெறுங்காடு..” “ஹ்ம்ம்.. அந்த ஃபீலிங் உனக்கு இருந்தா பரவாயில்ல, வந்து பார்குரவங்களுக்கும் இருந்துட்டா அப்புறம் வெளிய போகவே மாட்டாங்க இல்ல?..” “ஹஹ்ஹா.. லூசு கிறுக்கா.. என் வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க டா.. அதுபோக நானும் யாரையும் கூப்டதில்ல…. கூப்பிட விருப்பமும் கிடையாது.. எப்போவுமே இந்த இடத்துல நான் மட்டும்தான் இருக்கணும்னு விரும்புவேன்…… ஏன்னா எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும்.. இன்னைக்கி வரைக்கும் நானாவே ஒரு ஆள கூப்டு என் வீட்ட காமிச்சி இருக்கேன்னா அது நீ ஒருத்தன் மட்டும்தான்..” என்று சொல்லிவிட்டு பின்னால் தொங்கும் முந்தானையை இடுப்பில் சுத்தி சொருகிகொண்டு கூந்தலை இறுக கட்டி ஸ்டைலாக சேவலுக்கு தலையில் நிற்பது போல முடியை குவித்து ஒரு கிளிப் போட்டுக்கொண்டே கிச்சனில் இருவருக்கும் ஜூஸ் கலந்துகொண்டிருந்தாள்.. தன்னைத் தவிர வேறு யாரையும் அவள் இன்று வரை கூப்பிட்டதில்லை என்பதை நினைத்து உள்ளுக்குள் மிகவும் பெருமிதம் கொண்டான்.. காரணம் இன்று வரை அவன் வாழ்கையில் தன் தாயும், நண்பன் ராகவையும் தவிர்த்து யாருமே அவனுக்கு இப்படி முக்கியத்துவம் குடுத்து பேசியதில்லை, இப்போது அவனுடைய சக வயது பெண், அதிலும் சமீபமாய் செல்ஃபோன் உரையாடல்களில் அவனை நன்கு புரிந்து அவன் மனதை சில நாட்களாய் மயக்கத்தில் ஆழ்த்தும் ஒருவள் அவள் வாயால் இப்படி சொல்வதைக் கேட்ததால்தான் அந்த தனி சந்தோஷத்துக்கு காரணம்.. கிச்சனில் விழும் இளம் வெயில் வெளிச்சத்தில் கரு நீல நிற புடவை மற்றும் ப்லவுசில் அளவாக தெரியும் அவளது தங்க நிற முதுகையும், சிக்கனமாக தெரியும் இடுப்பையும் கண்டு காம உணர்வுகள் ஏதும் இன்றி அவளது அழகை மட்டும் மெளனமாக ஆராதித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்….