இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“பரவாயில்லையே… உணகுள்ளையும் எதோ இருக்குன்னு சொல்ல வர்ற.. சரி உன் கிட்ட ஒரு கேள்வி… காதல் பத்தி என்ன நினைக்குற?….”“அது ஒரு சுகமான உணர்வு.. வந்தா சந்தோஷமா இருக்கும்… வரலன்ன இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. ஹஹ்ஹா..” என்று சிரித்தான்.. “ஹஹ்ஹா.. ஒரு விதத்துல நீ சொல்லுறது கரெக்ட் தான்… ஏன் நீ யாரையும் காதலிக்கலையா?” என்றாள்.. “சீரியஸான காதல் எனக்கு இன்னும் யார் மேலயும் வந்ததில்ல.. கூடவே என் இயல்புக்கு அது வருமான்னு தெரியல.. தானா அமையுற விஷயம்தான..!! தீவிரவாதி மாதிரி என்னிக்காவது வந்து தாக்கும்.. அப்போ பார்த்துக்கலாம்.. ஹஹா..”- என்று சிரித்தான் கார்த்திக்…. “ஏன் அப்படி சொல்லுற?.. உன் கிட்ட கண்டிப்பா எந்த ஒரு பொண்ணாவது வந்து ப்ரோப்போஸ் பண்ணி இருப்பாங்களே?..” என்றாள்.. “உஹும்…” – சந்தோஷமாக சிரித்துக்கொண்டே சொன்னான் கார்த்திக்…. “பால்கனியோரம் நின்றுகொண்டு அவளுக்கு பதிலளிக்கும்போது அடிக்கும் காற்றில் அவனுடைய துணி லேசாக ஆடும்போது அதை கவனித்த சஞ்சனாவுக்கு எதோ நியாபகம் வர “கார்த்திக்.. அந்த பாக் எடுத்து குடேன்.. நான் உணக்கொன்னு தரப்போறேன்” என்றாள்.. அந்த பாக் திறந்து அவன் கையில் ஒரு காஸ்ட்லியான பிராண்டட் ஷர்ட்டும், பாண்டும் குடுத்து “இதை ஒரு தடவ போட்டு ட்ரை பண்ணி பாரேன்?..” – என்று ஒரு அண்பு வேண்டுகோள் விடுத்தாள்.. ஒன்றும் புரியாமல் முழித்தான் கார்த்திக்.. “என்ன யோசிக்குற?..” என்றாள். “எதுக்கு எனக்கு இது?..” அவள் தருவதை உடனடியாக வாங்க கூச்சப்பட்டான்.. “போன வாரம் ஒரு கடைக்கு போய் இருந்தேன்.. அப்போ இந்த ஷர்ட்டும், பாண்டும் உனக்கு போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி.. பொதுவா எனக்கு க்ளோஸா இருக்குறவங்களுக்கு நான் இதை செய்வேன்.. அதான் உனக்கு வாங்கினேன்.. ஒரு தடவ போட்டு பாரேன்..” – ஆர்வமாய் கேட்டாள் சஞ்சனா.. அவள் அன்பாக குடுப்பதை அவனுக்கு வேண்டாம் என்றுசொல்ல மனமில்லை, அதே சமயம் அதெல்லாம் இவனுக்கு சரி வருமா என்றும் ஒரு குழப்பத்தில் இருந்தான்.. இருந்தாலும் அவள் குடுத்ததை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள அறையினுள் சென்று அவற்றை மாட்டிக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான்.. பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் சட்டென அவன் பார்வையே அவனை ஈர்த்தது.. கச்சிதமாய் எந்த ஒரு லூசான ஃபிட்டிங்கும் இல்லாமல் தெளிவாக ஸ்லிம் ஃபிட்டாக ஒரு ஷர்ட்டும், கால்களை எங்கு ஒட்டி பிடிக்க வேண்டுமோ அங்கு ஒட்டிப்பிடித்து எங்கு தார்ந்து இருக்க வேண்டுமோ அங்கு தளர்ந்து இருந்ததை எல்லாம் சுத்தி சுத்தி கண்ணாடியில் அவனை அவனே ஆச்சர்யமாக பார்த்து ரசித்தான்…. சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து சஞ்சனாவின் முன் நின்றான்.. “வாவ்… செமையா இருக்க டா… கார்த்தியா நீ? எங்க ஒழிச்சி வெச்சி இருந்த இவ்வளோ ஸ்மார்டான ஒருத்தன இத்தன நாளா? நான் நினைச்சது 100% கரெக்ட்.. இதைப் பார்கும்போதே நினைச்சேன் உனக்கு சூப்பரா இருக்கும்னு. அதே மாதிரி சூப்பர் ஃபிட்டிங் டா….” – சஞ்சனா தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாய் அவளுடைய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் பார்த்தான்..