இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“அவளுக்கு பிடித்த விதத்தில் அவனைப் பார்க்கணும்னு எண்ணி அவனுக்கு டிரஸ் வாங்கி குடுத்து, அதை அவன் போட்டுப்பார்கையில் கண்ணாடியின் முன் தெரியும் அனைத்தும் அவனது பார்வையையும் கவர்ந்த பொழுது, சஞ்சனா மீது காதிக்குக்கு ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது…. “டேய்.. அப்பப்போ ஏண்டா ஆஃப் ஆயிடுற?…. ஏதாவது பேசு டா.. என்ன ஆச்சு?… கொஞ்சம் கூட பிடிக்கலையா?” – லேசான கவலையுடன் கேட்டாள் சஞ்சனா.. “கொஞ்சம் இல்ல சஞ்சு… ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று கொஞ்சம் எமோஷனலாக கார்த்திக் சொல்வதை அவன் உதடுகள் மறைத்தாலும் கண்கள் சஞ்சனாவுக்கு காட்டிக்குடுத்தது.. “அப்படியே இந்த டிரஸ்லையே கொஞ்ச நேரம் இரு.. இதுலதான் நீ பார்க்க நல்லா இருக்க.. என்றாள் சஞ்சனா.. அப்போது பொறுமையாக வந்து ஒரு ச்சாரில் அமர்ந்தான் கார்த்திக்.. அவனுக்குள் ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த தெரியாமல் ஒரு புறம் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க.. மற்றொரு புறம் அவள் செய்த விஷயம் அவனுக்கு பிடித்திருக்கிறதென்று சஞ்சனாவுக்கும் புரிந்திருக்க ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தனர்.. “அந்த சைலன்ஸை உடைக்க கார்த்திக் தன் தொண்டையை “உக்..ஹ்ம்..” என்று கரகரத்துக்கொண்டு ஆரம்பித்தான்.. “காதல் பத்தி நீ என்ன நினைக்குறன்னு சொல்லு.. நான் தெரிஞ்சிக்குறேன்..” என்றான் ஆர்வமாக.. “நீ சொன்ன மாதிரியே அது ரொம்பவும் அழகான ஒரு உணர்வு… ஆனா அதே சமயம் நீ சொன்ன மாதிரி அந்த உணர்வு வராம இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு எல்லாம் என்னால சொல்ல முடியல.. காரணம் எனக்கு என் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு நாடகத்தோட உணர்வுதான் அது..” என்றாள்.. “என்ன நாடகம்..?..” மீண்டும் அதே ஆர்வம் அவனிடம்..

“ஒரு நாட்டோட அரசன் யாராலையும் தோற்கடிக்க முடியாத ரொம்பவும் சக்தி வாய்ந்த வலிமையானவனா இருப்பான்.. அவன் மனசுல ஒரு பொண்ணு மேல காதல் பூக்கும்..