இடை அழகி மேடம் சங்கீதா 15 69

உம்மனசுல நீ எனக்கு இப்படி ஒரு எடம் குடுப்பன்னு நெனைக்கல டா…. ரொம்ப நாளாவே நான் உனக்கு தகுதியானவளான்னு என் மனசுக்குள்ள ஒரு போராட்டம் இருந்துச்சி.. ஆனா நீ இவ்வளோ தூரம் என்ன நேசிக்குறத பார்க்கும்போது என்னால இனி உன்ன விட முடியாதுடா….” – அடிவயித்தில் சந்தோஷத்தின் உச்சத்தால் ஏற்படும் கிச்சுகிச்சு உணர்வுடன் சஞ்சுவின் அதீத இறுக்கத்தையும் தாண்டி எப்படியோ ஒரு வழியாக வாழைப்பழம் போல் அகல வாயுடன் சிரித்தபடி அவளை தன் கைகளாலும் கட்டி அணைத்தான் நம் வாத்து…. “இனி என்னிக்கும் என்ன விட்டுட மாட்டல்ல?….” – லேசான ஈர விழிகளுடன் கார்தியைப் பார்த்து கேட்டாள்.. “நீயே கழுத்த பிடிச்சி தள்ளினாலும் நான் இங்கயே தான் சுத்திட்டு இருப்பேன்….” – என்று சொல்லி விட்டு “இவ்வளோ எமொஷ்னலா பேசிட்டு பின்னாடி நீங்க எங்கள விட்டுடாம இருந்தா சரி..” என்று கார்த்தி மெதுவான குரலில் முணுமுணுக்க.. “என்னது?….” கார்த்தியின் கண்களைப் பார்த்து கேட்டாள் சஞ்சு.. “இல்ல..ஒண்ணுமில்ல….” என்று சமாளித்தான்.. “இல்ல.. நீ என்னமோ சொன்ன… சொல்லித்தான் ஆகணும் சொல்லு” என்றாள்.. “இல்ல.. நீயும் என்ன என்னிக்கும் விட்டுட மாட்டால்ல?” என்று சஞ்சுவை பார்த்து இளித்தான்.. ஹேய்…. என்னிக்கும் ஒரே நிலையில குணம் இல்லாத ஆம்பளைங்க கிட்டதான் பொண்ணுங்களுக்கு கஷ்டம்…. ஆனா அப்படி ஒரு நெலம எனக்கு உன் கிட்ட வர்றதுக்கு வாய்ப்பில்ல.. அப்படி ஒரு நெலம வந்தாலும் நான் உன்ன விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா… “அது.. அது… அதுதான் என் சஞ்சு.. ஹஹ்ஹா.. ஹஹஹா…” என்று அவளை அனைக்கும்போது…. “விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா செல்லம்…. ஒருவேல உன் குணம் மாறினா, சாப்பாட்டுல கொஞ்சம் வெஷம் வெச்சி உன்ன முதல்ல கொன்னுட்டு, செத்து போய்ட்டியான்னு கன்ஃபார்ம் பண்ண பெறகு நானும் ரெண்டு வாய் சாப்டு உன் கூடவே செத்துடுவேன்….” – என்று சஞ்சனா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவன் நெஞ்சில் முத்தமிடும்போது நம் வாத்துக்கு தொண்டையில் எச்சில் வேகமாய் உள்ளே இறங்கியது..!! “என்ன விட்டுடுவியா டா….?” என்று பாவமாக அவனைப் பார்த்து கேட்டள் அவன் சஞ்சு.. “ச்சே ச்சே…. கடைசி வரைக்கும் எனக்கு நீதான்…. உனக்கு நான்தான்….” என்று அவளுடைய தலையை தடவி மீண்டும் தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான்…. “நேத்துலிருந்து எதாவது சாப்ட்டியா?..” அவன் நெஞ்சில் அழுத்தி தலை வைத்து கேட்டாள்….

“ஹக்.. க்ர்ஹ்ம்…. ஸோ….” – என்று கார்த்திக் அமைதியை உடைக்க…. “ஸோ….?” – ஓரக்கண்ணால் பார்த்தாள்.. “ஸோ…. ஏதாவது பேசு… ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?” – மெதுவான குரலில் கேட்டான் கார்த்தி.. அவளிடமிருந்து மௌனம்…. “பிடிக்கலையா?” – கஷ்ட்டப்பட்டு பேசுனதெல்லாம் வீனாப்போயிடுமோ என்றசின்ன பதட்டத்துடன் கேட்டான் கார்த்திக்..

“அப்டியெல்லாம் இல்ல” என்று மெளனமாக தலையசைத்தாள்.. “பின்ன ராங் டைமா?…. இப்ப பேச பிடிக்கலையா?….” – மெல்ல கதவை நோக்கி நகர்ந்தான் கார்த்திக்.. அதை கவனித்த சஞ்சு நிற்குமிடத்தில் இருந்து சற்று நிமிர்ந்தாள்.. இறங்குவதற்கு முன் “என்ன…. பிடிக்கலையா சஞ்சு..?” – குரல் லேசாக தழுதழுத்தது கார்த்திக்கு.. “உன்ன பிடிக்கலன்னு நான் சொன்னா நீ நம்பிடுவியா….” கூர்மையாக கேட்டாள் சஞ்சனா.. “அப்போ என்ன ஏத்துக்குறதுல ஏதாவது குழப்பமா?..” என்று கேட்டுஅவன் முகம் வாடுவதை கவனித்தாள் “அப்டியில்ல..” என்று மீண்டும் பேசாமல் மௌனமாய் தலையசைத்து பதில் சொன்னாள்..