இடை அழகி மேடம் சங்கீதா 15 69

உண்மைய சொல்லுறாங்களா இல்ல பொய் சொல்லுறாங்களான்னு சொல்லுறவங்க குரல்ல இருக்குற வைப்ரேஷன்ல தெரிஞ்சிடும்.. நீ என்ன சொல்லுறன்னு பார்க்குறேன்..” – என்று சொல்லி கைகளை தேய்த்துக்கொண்டு கேள்வியை கேட்க தயார் ஆனாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்.. உன் கண்ணை மூடிக்க..” – எக்சைட்மென்டுடன் கேட்க்க ஆரம்பித்தாள் சஞ்சு.. “ஹஹா.. ஓகே.. மூடிட்டேன்..” – என்ன கேள்வியென்று கேட்க ஆர்வமானான் கார்த்திக்.. “அந்த அரசனை மாதிரி உன் வாழ்க்கைல நீ யாருக்காக 1000 தடவ இறக்குறதுக்கும் தயாரா இருப்பன்னு யோசிச்சி சொல்லு? நீ எவ்வளோ நேரம் வேணும்னாலும் யோசிச்சிக்கோ.. ஆனா சொல்லுற பதில் உண்மையா இருக்கணும்..” – என்று சஞ்சனா சொல்லி முடித்தவுடன்.. கார்த்திக் மிகவும் ஆழ்ந்து யோசித்தான்.. முதலில் சில நொடிகள், பிறகு அதுவே பல நிமிடங்கள் ஆனது… “”தூங்கிட்டியாடா. டேய்?” என்று உலுக்கினாள் சஞ்சனா..

“ஆங்.. இல்ல இல்ல.. யோசிச்சிட்டு இருந்தேன்..” – என்றான் மெதுவாக.. “ஹ்ம்ம்.. சரி சொல்லு யார யோசிச்ச?..” – சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா.. “எனக்கு எங்கம்மா தான் நியாபகத்துக்கு வந்தாங்க..” – கொஞ்சம் தொண்டையை விழுங்கிக்கொண்டே சொன்னான் கார்த்திக்.. “ஒஹ்..” – அவன் சொல்வது பொய் என்று உணர்ந்தாள் சஞ்சனா.. “சரி உண்மையா சொல்லு யார் யோசிச்ச?…” – மீண்டும் அவன் கண்களைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்.. “அதான் சொன்னேனே.. எங்கம்மான்னு.. உண்மையா தான் சொல்லுறேன்..” – என்று சமாளித்தான்.. “ஹஹ்ஹா.. டேய்.. உன் கண்ணு ஒன்னு சொல்லுது, உன் வாய் ஒன்னு சொல்லுது.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. நீ யார யோசிச்ச?..” – அவள் கண்டுபிடிப்பில் தெளிவாக இருந்தாள் சஞ்சனா.. “செப்பா.. நீ எவ்வளோ தூரம் கேட்டாலும் என் பதில் அதுதான்.. சும்மா சும்மா பொய் சொல்லுறன்னு சொல்லிட்டே இருந்தா அப்புறம் நிஜமாவே பொய் தான் சொல்லுவேன்..” – என்றான்.. “நீ இப்போ சொல்லுறதே பொய்தான்…. அடுத்து சொல்லுறது என்னவா இருந்தா என்ன?..” – என்றாள் காஷுவலாக.. “ஆமா உன்ன நினைச்சேன்.. ஹ ஹ.. போதுமா..” என்றான்.. “சும்மா ஜோக் அடிகாதடா.. உண்மைய சொல்லு.. ப்ளீஸ்.. – என்றாள் காஷுவலாக… சில வினாடிகள் மௌனம் காத்தான் கார்த்திக்… பிறகு மெதுவாக வாய் திறந்து “சத்தியமா நான் உன்னதான் நினைச்சேன்.. நீ விளையாட்டா இப்படி பேசி ஒரு சந்தர்பத்தை எனக்கு ஏற்படுத்தி குடுத்ததுல இப்போ ஒரு தைரியத்துல சொல்லுறேன்.. தனிப்பட்டு இந்த விஷயத்தை உன் கிட்ட நேரடியா எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியாது..