இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“ஹலோ.. என்ன சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஒரைஞ்சி போயி உட்கார்ந்திருக்க?… ஏதாவது பேசு…” – என்றான் கார்த்திக்.. “இல்லடா.. கஷ்டம் எதுவும் இல்ல.. உள்ள இருக்குறதை கொட்டுறதால மனசு லேசாகுது.. நீதான் பாவம் என் கிட்ட மாட்டிக்கிட்டு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க..” என்று லேசாக நொந்துக்கொண்டாள்.. “ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் சொல்லாத.. உன் கூட பேசுறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்..” – என்று கார்த்திக் மெலிதாய் சிரித்து சொல்ல, சஞ்சனாவிடம் இருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை.. ஒரு மௌனமான சந்தோஷத்தைத் தவிர..

“நானும் எனக்குள்ள சில விஷயங்கள வெச்சிருக்கேன்… ஆனா அதெல்லாம் நீ எழுதினா மாதிரி வாக்கியங்கள் கிடையாது..” – என்றான் கார்த்திக்.. “வாக்கியங்கள் இல்லன்னா வேறென்னது அது?…” – ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா.. “கேள்விகள்..” “ஒஹ்..” “ஆனா அந்த கேள்விக்கு யாருமே சரியான பதில் சொன்னதில்ல..” “அப்படி என்ன கேள்வி அதெல்லாம்.. ஹ்ம்ம்.. கேளு கேளு பார்க்கலாம்..? என்று கார்த்திக் அருகே முகத்தை நீட்டி அவனருகில் வந்து சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா..” “ஒரு ஆணுக்கு எது பெஸ்ட் மோதிரம்னு சொல்ல முடியுமா?” – சிரித்துக்கொண்டே புருவங்கள் உயர்த்தி கேள்வி எழுப்பினான் கார்த்திக்.. “ஹ்ம்ம்.. பிளாட்டினம், தங்கம், கல்லு வெச்ச மோதிரம், ராசிக்கல் வெச்ச மோதிரம்”.. என்று அவளும் ஒன்று ஒன்றாக சொல்லிக்கொண்டே போனாள்…. ஒன்றும் தென்படவில்லை.. கடைசியாக ஒருவழியாக அவனிடம் சரணடைந்து “நீயே சொல்லிடுடா.. ப்ளீஸ் தெரிஞ்சிக்கலைனா, தலை வெடிச்சிடும்..” என்றாள்.. அவள் கண்களை நேராகப் பார்த்து சொல்ல தொடங்கினான்.. “காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவியோட கால் மெட்டிய விட ஒரு சிறந்த மோதிரம் இருக்க முடியுமா ஆணுக்கு?” – என்றான்.. கார்த்திக் இதை சொன்னவுடன் முகத்தின் கீழ் கை வைத்து குனிந்து கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு ஆச்சர்ய சிரிப்புடன் அவனைப் பார்த்தள்…. “இன்னொன்னு சொல்லுறேன்..” “ஹ்ம்ம்..” எதுவும் பேசாமல் அவன் கண்களையே கூர்ந்து கவனித்து தொண்டையில் இருந்து ஒரு மெல்லிய சத்தம் மட்டும் குடுத்தாள்.. “ஐ லவ் யூ….” – என்று கார்த்திக் ஆரம்பித்தான்.. அதற்குள் சஞ்சனா உடனே ஒரு அதிர்ச்சி பார்வையை குடுத்தாள்.. “ஹஹாஹ்.. பொறு பொறு.. நான் இன்னும் முடிக்கல.. பயப்படாத..” – என்று அவள் பார்வையைக் கண்டு சிரித்தான் கார்த்திக்.. “ஐ லவ் யூ” ங்கறது கேள்வியே கிடையாது…. ஆனாலும் உலகம் முழுக்க இருக்குற காதலர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த வார்த்தைய இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு ஏன் பதில் எதிர் பார்க்குறாங்க?..” “ஹ்ம்ம்..” ஒன்றும் பேசாமல் மௌனமாய் தலை அசைத்தாள்….