இடை அழகி மேடம் சங்கீதா 15 69

அதே நேரம் உள்ளே ஜூஸ் கலக்கும்போது காலையில் அந்த இரு வாயாடிகளும் கார்த்திக்கை “அவ ஆள்” என்று கோவத்தில் இவளிடம் சொன்னதை மீண்டும் மனதுக்குள் ரகசியமாக அசை போட்டுக்கொண்டிருந்தாள் சஞ்சனா…. ஜூஸ் எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது மீண்டும் வீட்டைப் பற்றி பேச தொடங்கினாள் சஞ்சனா.. “ராகவ் கூட இன்னிக்கி வரைக்கும் இங்க வந்ததில்ல.. வரக்கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்ல, ஆனா வர்றதுக்கு அவனுக்கு சந்தர்ப்பம் அமையல..” மீண்டும் அவன் எனிமியை பத்தி எதோ ஒரு பேச்சு வருகையில் ஒரு நல்ல சுகத்தில் லயித்து இருந்தவன் அவள் பேசுவதை கவனிக்கவில்லை என்பதுபோல வீட்டில் உள்ள சுவர் அனைத்தையும் அங்கும் இங்கும் பார்த்தான்.. அப்போது அவன் பார்வையை சின்ன சின்ன ஃப்ரேமில் தொங்கிக்கொண்டிருக்கும் சில வாக்கியங்கள் அவன் கவனத்தை ஈர்த்தது.. “ஹஹ்ஹா…. ஆளப்பாரு.. நோட்டம் விட்டது போதும்டா…. அப்படி ஒன்னும் என் வீடு பெரிய பேலஸ் கிடையாது… வந்து உட்காரு வா..” என்றாள் சஞ்சனா.. “இந்த வாக்கியங்க எல்லாம் நல்லா இருக்கே.. நெட்ல கூகிள் பண்ணி எடுத்தியா?… இல்ல எதாவது புக் ஸ்டோர்ல இருந்து சுட்டியா?..” என்றான் நக்கலாக.. “ஹலோ.. நாங்கெல்லாம் சொந்தமா எழுதுவோம்.. ஒவ்வொருத்தருக்கும் இருக்குற விருப்பு, வெறுப்பு, கோவம், தாபம், மட்டற்ற எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த பல விதங்கள் இருக்கு.. ஆனா நான் வார்த்தைகளா என் எழுத்துல கொட்டி என் மனசை சாந்தி படுதிக்குவேன்.. அப்படி செஞ்சதுதான் இது ஒன்னு ஒன்னும்..” – என்று சஞ்சனா சொல்ல “ஹ்ம்ம்.. நம்பறா மாதிரி இல்லையே….” அவளை கொஞ்சம் வெருப்பேத்த யோசித்தான் கார்த்திக்.. “ஹ்ம்ம்.. நீ நம்புறதுக்கு என்ன செய்யனும்னு சொல்லு, செஞ்சிடலாம்..” – அவன் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா… இந்த போர்டுல இருக்குற வாக்கியங்கள படிக்கும்போது எனக்கு எப்படி ஒரு உணர்வு இருந்துச்சோ நீ எதாவது இப்போ புதுசா சொல்லுறதை கேக்கும்போதும் எனக்கு ஏற்படணும்.. அப்போ ஒத்துக்குறேன் இதெல்லாம் எழுதினது நீதான்னு.. எங்க சொல்லு பாப்போம்.. – என்று சொல்லி அவள் முன் ஒரு ச்சார் போட்டு அமர்ந்தான்…. சில நொடிகள் மௌனமாய் இருந்தாள் சஞ்சனா.. “ஹஹா.. என்ன சஞ்சு சைலன்ட் ஆயிட்ட?.. சரக்கில்லையோ?..” – அவள்தான் அனைத்தையும் எழுதி இருக்கிறாள் என்று அவன் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தாலும், அவளை எதாவது புதியதாய் சொல்ல வைத்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம்தான் கார்த்திக்கை இப்படி பேச வைத்தது….