இடை அழகி மேடம் சங்கீதா 15 69

அப்போ வழியிலேயே நிக்க வெச்சி உன் கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு டெரரா கேட்டுகலாம்னு நெனச்சேன்…. ஆனா…” என்று நிறுத்தினான்.. “ஹஹ்ஹா ஹா…” சற்று பிஞ்சு முகத்தை வைத்து நம் கார்த்தி டெரர் என்று சொன்னதை எண்ணி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள்…. “ஆனா?…. ஹ்ம்ம் சொல்லு.. ஏன் நிறுத்திட்ட?” – அவள் புரியாமல் கேக்கும்போது கதவோரம் சாய்ந்து நிற்கும் அழகை ரசிக்க தவறவில்லை கார்த்திக்.. “இப்ப எதுக்கு சிரிச்ச?…” – ஏதாவது தேவல்லாத பிட்ட போட்டுட்டோமோ? என்று குழம்பினான்.. “ஹஹ்ஹா… ஒண்ணுமில்ல எதுக்கோ சிரிச்சேன்.. நீ சொல்லு..” “ஹ்ம்ம்.. எப்டி எப்டியோ உங்கிட்ட பேசனும்னு நெனச்சி வந்தேன்.. ஆனா இப்படி டவுன் ஆகி மண்டி போட்டுட்டேன்…. வாட் கேன் ஐ டூ சஞ்சு….” “ஹஹ்ஹா…. உள்ள வா.. ரொம்ப நேரமா வெளியவே நிக்குற….” – அவனுடைய கேள்விக்குறியான முகத்தைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தாள். சஞ்சனா ஒரு சிவப்பு நிற ஸ்லீவ்லஸ் ஸ்லிப் அணிந்து, நீல நிறத்தில் ஒரு சிறிய ஷால் ஒன்றை தன் கழுத்தில் தொங்க விட்டிருந்தாள்.. இடுப்பிலிருந்து முட்டிவறை வரக்கூடிய ஜீன்ஸ் ஃப்ராக் அணிந்திருந்தாள். அதில் அவளது முழங்காலின் அழகை மட்டுமல்ல, கதவை திறந்ததில் இருந்து அவள் குடுக்கும் புன்னகையில் ஒரு நம்பிக்கை கிடைத்த சந்தோஷத்தில், அவள் சிரிப்பு, அவள் கண்கள், அவள் பேச்சு, மற்றும் கதவோரம் சாய்ந்து அவள் காட்டிய வெட்கம், என்று அவளிடம் தென்படும் அனைத்திலும் கார்த்தியின் மனம் ஒரு மௌன நிலையை அடைந்திருந்தது.. சஞ்சனா ஹாலில் உள்ள டைனிங் டேபிள் அருகே நின்று கீழே பார்த்தபடி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்…. கார்த்தி என்ன பேசுவதென்று தெரியாமல் மற்றொரு புறம் அமைதியாய் நின்றிருந்தான்.. வீடு முழுவதும் ஒரு மிதமான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது….

மெதுவாக கார்த்தியை சஞ்சு நெருங்கி வர, கார்த்தியின் மனம் சற்று அதிகமாகவே படபடத்தது.. அவள் மெதுவாக நெருங்க நெருங்க ஒரு கட்டத்தில் சற்று வேகமாக அவனருகில் வந்து நின்றபடி அவனுடைய முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாள்.. அப்போது கார்த்தி தன் விரலால் அவள் கண்களின் ஓரம் தென்படும் லேசான கண்ணீரை துடைக்க கை உயர்த்தியபோது அவன் கையை தட்டிவிட்டு அடுத்த நொடி அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்… கார்த்திக் சற்று தள்ளி இருந்த சேரில் அமர்ந்து அவளை குழப்பத்துடன் பார்த்து “என்ன சஞ்சு?…. என்னதான் உன் பிரச்சனை?…. ப்ளீஸ்…. மனசு விட்டு பேசுடா”என்று முடிப்பதற்குள் சட்டென்று எழுந்து அவனை சேரோடு சேர்த்து இருக்கி கட்டி பிடித்து அவன் மேல் அழுத்தி சாய்ந்துகொண்டாள்…. “நீதாண்டா என் பிரச்சனை….ஐ லஃவ் யூ ஸோ மச் டா…. ஐ அம் ஸோ லக்கி…. வெரி மச் லக்கி….