அப்படி ஒரு அடியைக் கொடுக்கனும்ன்னா, சில நியாய தர்மம்லாம் பாத்துட்டிருக்க முடியாது. அதுனால, அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம். சொல்லப் போனா, நீ இவ்ளோ பெரிய அடியை, அவளுக்காக, அவிங்களுக்கு கொடுத்தது, எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.
அவ, அன்னிக்கு சொன்னதைக் கேட்டு எனக்கே பயங்கரக் கோபம் வந்துச்சு. உனக்கு எப்படியிருந்திருக்கும்னு எனக்கு தெரியாதா? அந்த மோகன் மட்டும் என் கைல கிடைச்சான்….
அவ எவ்ளோ ஃபீல் பண்ணா தெரியுமா? உனக்குத் தெரியுமா, என் பிரச்சினை காரணமா, நான் அவளுக்கு ஃபோன் பண்ணப்ப, அந்தாளு என்னையும் ஏதோ சொல்லியிருக்கான்.
நக்கலா, உன் ஃபிரண்டையும் வரச் சொல்லுன்னு ஏதோ சொல்லியிருக்கான். அதைக் கேட்டுட்டுதான், இவ என் கூட பேசுறதை கூட நிறுத்திட்டா.
ஆனா, அதுனால எனக்கு நடந்ததைக் கேட்டவ, இன்னிக்கும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிட்டிருக்கா. தான் ஹெல்ப் பண்ண முடியாததாலத்தான், எனக்கு இந்தப் நிலைமைன்னு நொந்துக்குறா! ஹரீஸ்ஸண்ணா வேற, தனியா, நாந்தான் காரணம்னு ஃபீல் பண்ணாரு.
இப்படி நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்துன அந்த ஆளை, சாதாரணமால்லாம் நீ விட்டிருந்தா, நானே உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். பட், அவ முகத்தைக் கூட மோகனால நிமிர்ந்து பாக்க முடியல, இவளைக் கண்டாலே பயந்துகிட்டு ஓடுறான்னு அவ சொன்னதுல இருந்து, நீ, என்ன பண்ணியிருந்தாலும், அது ரொம்ப கரெக்ட்டுன்னுதான் எனக்கு தோணுது!
என்னுடைய விளக்கத்தைக் கேட்டு அவனுக்கு மனசு கொஞ்சம் இளகியிருந்தது. இருந்தும் கேட்டான்.
சரி, நான் கரெக்ட்டாதான் பண்ணேன்னா, என்ன பண்ணேன்னு தெரிஞ்சிக்கோயேன். எனக்கு, உன்கிட்ட மறைக்கிறது கொஞ்சம் சங்கடமா இருக்கு என்று தயங்கித் தயங்கி சொன்னான்…
அவன் உள்ளுக்குள் எதையோ நினைத்து மிகவும் சங்கடப்படுகின்றான் என்று தெளிவாகப் புரிந்ததால் நிமிர்ந்து அவன் கண்களையே பார்த்துச் சொன்னேன்.
இங்க பாரு, இப்பியும் சொல்றேன். எனக்கு அது தெரிய வேணாம்.
எப்ப இந்த மாதிரி விஷயத்துல நியாய தர்மம் பாக்க முடியாதுன்னு சொன்னேனோ, அப்பியே எனக்கு இன்னொன்னும் தெரியும். நீ, உன் மனசாட்சியை மீறி சில விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருப்பன்னு. அதுனாலதான் சொல்றேன் எனக்கு தெரிய வேணாம்ன்னு!
இடையில் பேச வந்தவனை அவள் தடுத்து சொன்னாள்.
என்னை முழுசா பேச விடு. ஒரு விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கும். ஆனா, நீ மறைக்கனும்னு நினைக்கலியே? நாந்தானே சொல்ல வேணாம்னு சொல்றேன்?!
உனக்கு இவ்ளோ சங்கடத்தைத் தர்ற, உன் மனசாட்சியை உருத்துற ஒரு விஷயத்தை, எப்டிடா சொல்றதுன்னு நீ தவிக்கிற ஒரு விஷயத்தை, நீ என்கிட்ட சொல்ல வேண்டிய கஷ்டத்தை, என்னால உனக்கு தர முடியாது!
தவிர இந்த மனசு, ஒரு குரங்கு மாதிரி. நான் இன்னிக்கு சாதாரணமா எடுத்துக்குற ஒரு விஷயம், நாளைக்கு அது உறுத்துச்சுன்னாலோ, இல்லை என்னிக்காவது பேச்சு வழக்குல நான் அதைச் சொல்லிக் காமிச்சிட்டாலோ, அது நம்ம ரெண்டு பேருக்குமே பெரிய வலியைக் கொடுக்கும். அதை என்னாலியே தாங்க முடியாது. அதுனாலத்தான் சொல்றேன் என்று நிறுத்தியவள், என் கண்களையே பார்த்தவள், இன்னும் அருகில் வந்தாள்…
நீ அந்தாளைப் பழிவாங்க, என்ன பண்ணியிருந்தாலும், அது எவ்ளோ பெரிய தப்பாயிருந்தாலும், அது என்னைப் பொறுத்தவரை தப்புமில்லை. அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை! ஓகேயா?
நீ எப்பயும், என் மனசுல, உயரத்துலதான் இருக்கனும். நீ ஃப்ரியா இரு! இட்ஸ் நத்திங்! ஓகே?
அவன் என்னையே பார்த்தான். உணர்ச்சி வேகத்தில் அவன் என்னை இழுத்து என் முகமெங்கும் முத்தமிட்டவன், பின் என்னை இறுக்கி அணைத்து, என் முன் நெற்றியில் முத்தமிட்டு, பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
தேங்க்ஸ் டி!
அவனது உணர்ச்சிவசப்பட்ட நிலையே சொன்னது, அவன் அதை நினைத்து ரொம்ப யோசித்திருக்கிறான் உள்ளுக்குள் என்று. நான் சொன்னது அவனுக்கு மிகப் பெரிய ரிலீஃப் என்று!
இது ஒரு பெரிய ட்ரிக். இது போன்ற சில விஷயங்களின் மூலம், எந்த ஆணையும் ஒட்டு மொத்தமாக, பெண்ணிடம் சரண் அடைய வைக்க முடியும். எல்லாப் பெண்களுக்கும் அந்த ட்ரிக் சரியாகத் தெரியாது என்றாலும், லாவண்யாவிற்கு அது மிகச் சரியாக தெரிந்திருக்கிறது. அது, ஏற்கனவே மனதால் முழுதும் சாய்ந்திருந்த மதனை, லாவண்யாவின் பக்கம் முழுமையாக சரணடைய வைத்தது.
மறந்தும் அவன், எனது திருமண விஷயத்தை அன்று பேசவில்லை. நானும் கூட, நாளை பேசிக் கொள்லலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். இந்த இரு நாட்கள், அவனுடைய காதலியாக இருக்க வேண்டும். அதன் பின் என்னை ஏற்றுக் கொள்வதும், வேண்டாம் என்பதும் அவன் முடிவு!
Nice can you please upload next part
Story supera iruku..