காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 9 57

அமைதியாக, அவனருகில் படுத்துக் கொண்டேன். அவனது கம்பளியையே, எனக்கும் போர்த்தியவன், அவனது கைக்குள், பின்புறமாக இருந்து அணைத்து, உறங்க ஆரம்பித்து விட்டான்.

படுத்த கொஞ்ச நேரத்திலேயே, அவன் தூங்கி விட்டான். அவன் தூங்கியதை அறிந்ததும், திரும்பி அவன் புறமாகப் படுத்தேன்.

அவன் முகம் தூக்கத்தில் மலர்ந்து இருந்தது. மனம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது போலும்.

ஹப்பா, என்னா கோபம்! ரொம்பதான். சாப்பாட்டுல காரம் கம்மி பண்ணச் சொல்லனும்.

அப்ப கட்டி பிடிக்க விட மாட்டேன்ன? இப்ப என்னடா பண்ணுவ? அவன் முகத்தையும், மார்பினையும், தோள்களையும் வருடியவாறு, அவனையே பார்த்து கொஞ்சிக் கொண்டிருந்தேன்.

அவனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியில் உடனே தூக்கம் வந்தது என்றால், எனக்கு, அவன் மகிழ்ச்சியைக் கண்ட மன நிறைவில், தூக்கம் வரவில்லை.

அவனையே பார்த்துக் கொண்டு, அவனது ஆண்மை வாசத்தை ரசித்துக் கொண்டு, மனதோடு அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

காலையில் 8 மணிக்கு அவனே என்னை எழுப்பினான், சூடான டீயுடன். சீக்கிரம் குளிச்சிட்டு வா, 9.30 க்குள்ள மீட்டிங் ஆரம்பிக்கனும். சாப்ட்டு போக கரெக்ட்டா இருக்கும்.

மனதின் நிறைவாலோ என்னமோ, மிகவும் ஃப்ரெஸ்ஸாக உணர்ந்தேன். சீக்கிரம் குளித்து விட்டு, நல்லதொரு உடையில் வந்தேன். அது நாள் வரை உடையில் அதிகம் கவனம் காட்டாதவள், மேக்கப் செய்யாமல் சிம்பிளாக வந்தவள், அன்று கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டேன்.

என்னை மேலும் கீழுமாக பார்த்தான். வெளிப்படையாகவே ரசித்தான். என்னதான், அவனுக்காக இதை நான் செய்தாலும், அவன் ரசிக்கும் போது வெட்கமாய் இருந்தது. மனம் பொய்யாய் கோபம் கொண்டது.

என் கோபத்தை அலட்சியம் செய்தவன், சீக்கிரம் சாப்ட்டுட்டு, நீ முன்னாடி போ! நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.

எனக்கு கோபம் வந்தது. ஏன் ஒண்ணாத் தங்குனோம்ல, ஒண்ணாப் போனா, ஸ்டேட்டஸ் கொறைஞ்சிடுமோ? ஏனோ, நேற்றைய இரவுக்குப் பின், எனக்கு அவனுடன் சேர்ந்து செல்ல வேண்டும் போல் இருந்தது.

அவன் முறைத்தான். நீதான் இந்த மீட் முழுக்க ஆர்கனைஸ் பண்ற ஆளு. கரெக்ட்டா எல்லாம் இருக்கான்னு நீ முன்னாடியே போய் செக் பண்ற மாதிரி பாரு.

நான் வர்றப்ப, எதுவும் சரியா இல்லீன்னா, உனக்குதான் சங்கடமா இருக்கும். அதுக்குதான் சொன்னேன்.

நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். சரிதான்! எனக்காக அவ்ளோ பாக்குறீயாடா!

எனக்கு ஏன் இவ்ளோ கோவம்? அதுவும் இவனிடம் என்றால் ஓவராதான் போறேன்! இவன் அக்கா இவனைத் திட்டவே மாட்டேங்கிறான்னு சொல்லிட்டு, நான் எதுக்கெடுத்தாலும், இவனையே குற்றவாளியாக்கி திட்டிகிட்டு இருக்கேன். என்னை ரொம்ப கெடுத்து வெச்சிருக்கான்…

அடிப்பாவி, நேத்து சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டு, அவன் கூடவே படுத்து எந்திரிச்சிட்டு, இப்ப அவன் என்னமோ கெடுத்துட்டான்ன்னு யோசிச்சிட்டிருக்க?

அவன் மேலுள்ள காதலால், என் மனம் கண்டபடி பிதற்றிக் கொண்டிருந்தது.

நான் சீக்கிரம் சென்று எல்லாவற்றையும் செக் செய்து விட்டு அவனுக்கு அழைத்தேன்.

எல்லாம் ரெடி! வா!

அன்றைய நாள் முழுக்க, அவன் பார்க்காத சமயத்தில் அவனை நான் ரசித்துக் கொண்டே இருந்தேன். என் மனம் மிக சந்தோஷத்தில் இருந்தது.

இரவு நெருங்கியது!

Updated: December 10, 2021 — 5:59 am

2 Comments

  1. Nice can you please upload next part

  2. Story supera iruku..

Comments are closed.