காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 9 57

இரவு நெருங்க நெருங்க, என் மனம் படபடப்பு அடைந்தது. இன்று இரவும் என்னை நெருங்குவானா? என்ன செய்வான்?

அவன் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேனா, செய்யக் கூடாது என்று நினைக்கிறேனா?

அவன் சாப்பிட்டு விட்டு லேப்டாப்பில் ஏதோ நோண்டிக் கோண்டிருந்தான். எனக்கு, என்ன செய்ய வேண்டுமென்று புரியவில்லை. நானும், அமைதியாக நாளைக்கு என்ன செய்வது என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், மனம் அதில் இல்லை.

கொஞ்ச நேரத்தில் அவன் வேலையை முடித்தவன், என்னை பார்த்தான்.

தூங்கலை?

ம்ம்.. தூங்கனும்!

என்னையே பார்த்தான். நான் அமைதியாக இருந்தேன். பின் எழுந்து என்னருகில் வந்தான்.

சரி வா, தூங்கப் போகலாம்.

எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அமைதியாக நானும் எழுந்து நின்றேன்.

என்னை விஷமமாகப் பார்த்து புன்னகை செய்தான். மெல்ல என் இடுப்பில் கை கொடுத்து என்னை அருகே இழுத்தான்.

போலாமா?

எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் மவுனமாக தலையைக் குனிந்து கொண்டேன். அப்படியே, என்னை, அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

என் அருகில் படுத்தவன், ஒரு கை ஊன்றி என்னைப் பார்த்தான். அவன் பார்வையின் வீச்சை என்னால் தாங்க முடியவில்லை. என்னையேப் பார்த்தவன், என் நெற்றியில் முத்தமிட்டான். என் கண்களில் தொடர்ந்து முத்தமிட்டான்.

பின் என்னை ஆழமாகப் பார்த்தவன், இன்னிக்கு என்ன என்னை ரொம்ப சைட்டடிச்ச? ஏன் நான் பாக்கதப்ப மட்டும்தான் சைட்டடிப்பியா? இப்ப உன் கண் முன்னாடியே இருக்கேன், இப்பப் பாரேன்?

என் உதடுகள் அதிர்ந்து லேசாகத் திறந்தன. கண்களும் விரிந்தன. திருடன், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

அதிர்சியில் திறந்த எனது உதடுகளை அவனது உதடுகள் கவ்விப் பிடித்தன. அப்படியே சுவைக்க ஆரம்பித்தன. விரிந்த எனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிறக்கத்தில் சொருக ஆரம்பித்தது.

மெல்ல மெல்ல அவனது உதடுகள் என முகமெங்கும் முத்த மழையை பொழிந்தன. நேற்று என்னிடம் எதிர்பார்த்த அதே ஐ லவ் யூ இன்றும் அவன் எதிர்பார்ப்பதை அவன் கண்கள் சொல்லியது.

எனது மவுனத்தால், நேற்று போன்றே, இன்றும் ஆவேசமாகவே என்னை நெருங்கினான். அவன் ஆவேசமாய் என்னை நெருங்குவதுதுதான் நியாயம், நான் மறுத்த அன்புக்கு பதில் அன்பு செலுத்தும் முறை என்பதால், மவுனமாக நான் அதை அனுமதித்தேன்.

உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி வேகமாகவும், ஆவேசமாகவும் விரைந்தன. அவனது கைகளும், உதடுகளும் என் உடலில் படாத பாகங்களே இல்லை என்னும் அளவிற்கு அலைந்தன. அதே சமயம் எங்கும் அதிக நேரம் தங்கவும் இல்லை.

எந்த இலக்குமின்றி எனது மேனியில் எதையோ அலைந்து தேடிய அவனது கைகள்,

என்னுள் அவன் தேடிக் கொண்டிருக்கும் காதலைச் சொல்லாமல் சொல்லியது. எனக்கு அவன் மேல் இரக்கம் வந்தது. என் மேலேயேக் கூட கோபம் வந்தது. கூடிய சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்!

Updated: December 10, 2021 — 5:59 am

2 Comments

  1. Nice can you please upload next part

  2. Story supera iruku..

Comments are closed.