புன்னகையுடன் கூடிய நினைவுகள் அவன் மேலான காதலை இன்னும் ரசனையுடன் அசை போடத் தொடங்கியது! ரசனையான காதல் நினைவுகள், கொஞ்சம் கொஞ்சமாக காதலை, மோகத்தின் பக்கம் கொண்டு சென்றது! அது என் உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சமயத்தில்தான், என் மனதில் மின்னலடித்தாற் போன்று ஒரு நினைவு வந்துச் சென்றது!
அது, சற்று நேரத்திற்க்கு முன்புதான், அவன் என்னை, ஏறக்குறைய முழு நிர்வாணமாக பார்த்தான் என்பது!
அது, என்னுள் படபடப்பை ஏற்படுத்தியது! அவன் முன் நான் நின்றிருந்த தோற்றம் மெல்ல என் கண் முன் வந்தது. அது, என் கன்னங்களில் வெட்கச் சிவப்பை ஏற்படுத்தியது. என் மூச்சுக் காற்றை சூடாக்கியது!
அவன் என் ஜாக்கெட்டை கழட்ட முடியாமல் கோபத்தில் பிய்த்து எறிந்தது புன் சிரிப்பையும், அவன் மேல் பரிதாபத்தையும் கொடுத்தது.
திருடன், எப்பியும் அவசரம் அவனுக்கு! காதலைச் சொல்றதுக்கே அவசரப் பட்டவனாச்சே!
அந்த நேரத்தில் என்னை ரசித்துப் பார்த்தானோ? இல்லை சரியாகப் பார்க்கவில்லையோ? பாவம்!
ஆனாலும் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டாலும், தவறு செய்தாலும், நான் ஒரு வார்த்தைச் சொன்னவுடன், பொட்டிப்பாம்பாக அடங்கி, திரும்பிச்சென்றதை நினைக்கும் போது என் மனம் பூரித்தது!
அந்த நினைவில் என் மனம் பெருமிதத்தில் திளைத்தது!
எப்பேர்பட்ட பணக்காரன்! அதி புத்திசாலி! எவ்வளவு அழகிய பெண்ணையும் திரும்பிப் பார்க்காதவன், என்னிடம் மயங்கிக் கிடக்கிறானே! அவனுக்கு நான் என்னச் செய்து விடப் போகிறேன்?
ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைப் போன்றவன், ஒரு சாதாரண பெண்ணின் மனம் கனியக் காத்திருக்கிறான் என்றால், அவன் காதல் எவ்வளவு ஆழமானது?
அந்தத் தருணம், என்னை, நானே ஒரு மகாராணியைப் போல் உணர்ந்தேன். என்னுள் ஒரு கம்பீரம் குடியேறியது!
Nice can you please upload next part
Story supera iruku..