சரி சொல்லு! எதுக்கு என்னைத் தேடுன? என்ன விஷயம்!
அவனிடம் மெல்லிய தடுமாற்றம்! விஷயம்லாம் இல்லை. சும்மாதான் தேடுனேன்!
இப்பொழுது என் முகத்தில் ஆச்சரியம்.
விஷயமில்லாமியா இவ்ளோ கோவம்? எங்க போயிருக்கப் போறேன்? கொஞ்ச நேரத்துல வந்துடப் போரேன்! அதுக்கு எதுக்கு எங்கெங்கியோ தேடி அலையனும்? ம்ம்?
என் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை…
சொல்லு!
இல்லை… அது வந்து. கொஞ்சம் தடுமாறியவன், பின் சொன்னான், நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா, உன்னைக் காணோம். ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்குற!
சரி, வந்துடுவன்னு பாத்தா, இருட்டாகிட்டே இருக்கு, ஆனாலும் உன்னைக் காணோம்! நான் என்னான்னு நினைக்கிறது?
நீ கோவிச்சிகிட்டு எங்கியாவது போயிட்டியா? எங்க இருக்க? கையில காசு இருக்கா? எல்லாத்துக்கும் மேல இந்த இருட்டுல நீ எங்கியாவுது மாட்டிகிட்டன்னா? உனக்கு வேற குளிர் தாங்காது! ஸ்வெட்டர் எடுத்துகிட்டியா என்னான்னு கூடத் தெரியலை. தவிர, நான் பண்ணதுக்கு, நீ ரொம்ப வருந்தி, எந்த மாதிரி மனநிலையில இருக்கன்னு கூட தெரியலை!
கொஞ்சம் இடைவெளி விட்டவன், பெருமூச்சு விட்ட படி சொன்னான். உள்ளுக்குள்ள கொஞ்சம்… ரொம்பவே பயந்துட்டேன்… ஆனா நீ என்னான்னா, ஹாயா, இங்கியே ஓரமா உட்கார்ந்துகிட்டு இருக்க! எனக்கு எப்புடி இருக்கும்?!
Nice can you please upload next part
Story supera iruku..