லாவண்யா.
ம்ம்… ஒரு வேளை தூக்கத்தில் இருக்கிறேன் என்று செக் செய்கிறானோ? எனது உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது.
அதற்கு மேல் முன்னேறவும் அவனுக்கு தயக்கம். ஆனால், எனது அருகாமை, அவனுக்குள் கொஞ்சம் சூடேற்றவும் ஆரம்பித்திருந்தது. என்னையும் கூட கொஞ்சம் ஆட்டியிருந்தது.
நான் ஒரு முடிவு எடுத்திருந்தேன். அது, அவன் இப்பொழுது, என்ன செய்தாலும் நான் தடுக்கப் போவதில்லை. ஆனால், வாய்விட்டு எதுவும் சொல்லப் போவதில்லை! (எவ்ளோ சேஃப் கேம்?!). இனி அவன் முடிவு.
மெல்ல அவன் கை, என் தோள்களில் உலாவர ஆரம்பித்திருந்தது. அப்படியே, மெல்ல முதுகுப் புறம் சென்று, அங்கேயே கொஞ்சம் தங்கி, வருடி, பின் தயங்கித் தயங்கி இடையை நோக்கி நகர்ந்தது.
இடையை அடைந்த அவன் கை, மெல்ல என் இடையைப் பற்றியது! எனக்குள் ஒரு சின்ன அதிர்வு! அவனது கை, என் இடையை முதன் முறையாகத் தொடுகிறது! அந்த அதிர்வில் இருந்து தப்பிக்க, புகலிடம் தேடி, அவன் மார்பிலேயே இன்னும் ஒன்றினேன்.
இருந்தும் எந்த வித உணர்வோ அல்லது எதிர்ப்போ காட்டவில்லை. நான்தான் ஏற்கனவே முடிவெடுத்திருந்தேனே!
இவ்வளவு நேரம், என் அமைதி அவனுக்கு வசதியாக இருந்தது. இப்பொழுது, அதுவே அவனைத் தடுத்தது! இடையைத் தொட்ட கைகள், அடுத்து முன்னேற பயப்பட்டு அங்கேயே தங்கி நின்றன. அதே சமயம், இடையில், சும்மாவும் இல்லை!
அவனது தடுமாற்றம், அவனது ஆண்மையை எனக்குச் சொல்லியது. எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.
ஹேய்…
அவன் என்னைக் கூப்பிட்டான். நான் எந்த சலனத்தையும் காட்டவில்லை.
என்னிடமிருந்து, சின்ன ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறான்.
அவனுக்கு புரியவில்லையா? இதுவும் ஒருவித ஒத்துழைப்புதான் என்று!
இன்னும் எங்களுக்குள்ள கல்யாணம் ஆகலை, எந்த மாதிரி எதிர்காலம்னு தெரியாது, அப்புறம் எப்புடி நான் வாயைத்திறந்து சொல்லுவேன்? இது அவனுக்கு தெரியாதா? வேணும்னா எடுத்துக்க வேண்டியதுதானே? நான் என்ன, ஈவ்னிங் பண்ண மாதிரி தடுத்தேனா? லூசு! லூசு! மனதிற்குள் திட்டினேன்.
ஏய்… மீண்டும் கூப்பிட்டான்.
நான் அமைதியாகவே இருந்தேன்.
Nice can you please upload next part
Story supera iruku..