டக்கென்று, பெட்டில் இருந்த கம்பளியை எடுத்து என் மேல் போர்த்தியவன், என்னைப் பிடித்து அவன் பெட்டில் உட்கார வைத்தான். பின் வேகமாகச் சென்றவன், ஃபிளாஸ்க்கில் இருந்து, சூடாக டீயை கொண்டு வந்து கொடுத்தான்.
அது ஓரளவு குளிருக்கு இதமாய் இருந்தாலும், ப்ளாங்கட் எனக்கு கதகதப்பை கொடுத்தாலும், உள்ளுக்குள் ஏறியிருந்த குளிர், இன்னும் என் உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
டீயை குடித்தவுடன் வாங்கி டேபிளில் வைத்தான்.
இப்ப பராவாயில்லையா? அவன் குரலில் அக்கறை!
ம்ம்… பராவாயில்லை. சொல்லும் போதே என் உதடுகள் தந்தியடித்தது.
ம்க்கும்… நான் டாக்டர் இருக்காங்களான்னு கேக்கட்டுமா என்று நகர முயன்றவனை எனது கைகள் தடுத்தது!
கொ… கொஞ்சம் பக்கத்துலியே இரேன்!
நான் சொன்னது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மெல்ல என் அருகில் அமர்ந்தான். நான் அவன் கையை விடவில்லை.
இப்போது அவன் கோபம் குறைந்திருந்தது.
ப்ச்… இதுக்குதான் சொன்னேன், தனியா, ஸ்வெட்டரு இல்லாம போகாதன்னு! இப்பப் பாரு, இப்படி குளிருது உனக்கு. நான் சொல்ற பேச்சை மட்டும் கேக்க மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கியா என்ன?
அவன் குரலில் சலிப்பு இருந்தாலும், அவனது கோபமும், சலிப்பும் கூட என் மேல் கொண்ட அக்கறையால் என்பது, ஏற்கனவே அவன் மேல் நான் அவன் கொண்டிருந்த காதலைக் கூட்டியது.
அவனையே, சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது புன்னகையும், பார்வையும், அவனையே கொஞ்சம் குழப்பியது! இருந்தும் சலிப்புடன் சொன்னான்…
இந்தப் பார்வைக்கு மட்டும் கொறைச்சலே இல்லை. சொல்ற பேச்சையும் கேக்குறதில்லை. பக்கத்துல வந்தாலும் முறைக்கிறது. ஆனா, ஏதாச்சும் சொன்னா மட்டும், ஒண்ணுமே தெரியாத மாதிரி இப்பிடி பாக்…
அவனது பேச்சு பாதியிலேயே நின்றது. அவன் கண்கள் விரிந்தது. மனமோ குழம்பியது!
ஏனெனில், அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான், என்னை கோபமாக திட்டியவனின் மடியிலேயே சாய்ந்து கொண்டேன்! அவன் மடியில் நான் படுத்த உடன் அவன் பேச்சு நின்றது!
Nice can you please upload next part
Story supera iruku..