இன்னமும், அவன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அது, அவன், இன்னும் எதுவும் செய்யாமல் இருப்பதிலேயே தெரிந்தது! எனக்கும் கூட, நான் என்ன எதிர் பார்க்கிறேன் என்று தெரியவில்லை!
அவனது உடல் கூட கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது! அது குளிரிலா அல்லது எனது நெருக்கம் தந்த தயக்கத்தாலா என்று தெரியவில்லை!
நான், எனது ப்ளாங்கெட்டையே, அவனுக்கும் போர்த்தினேன். அவனையும் சரியாக படுக்க வைத்தவள், இப்பொழுது அவன் மார்பினுள் புதைந்து கண்களை மூடிக் கொண்டேன்!
அந்தத் தருணத்தை கண் மூடி ரசித்தேன். அவனுக்கும், எனக்குமான முதல் அணைப்பு! இது நாள் வரை நான் அனுபவித்த என் வேதனைகள், என் பிரச்சினைகள் எல்லாம் போய், நான் கை விட்ட எனது காதலை மீண்டும் கண்டெடுத்த நிம்மதி, ஒரு பெரும் பாதுகாப்பு என் மனதுள் தோன்றியது.
என்னையறியாமல், என் கண்கள் கலங்கியது!
அவன் உடலில் இருந்து வந்த ஆண்மை கலந்த வாசத்தை மெல்ல சுவாசித்தேன்.
கண் மூடியிருந்தாலும், நான் தூங்கவில்லை என்பதை உணர்ந்தவன், மெல்ல காதோரம் இருந்த என் முடிக் கற்றைகளை சரி செய்தான். என் முன் நெற்றியை வருடினான்.
அவனது இன்னொரு கை, என்னை மெல்ல அணைத்திருந்தது.
இப்ப பரவாயில்லையா? இன்னும் குளிருதா?
நான் பதில் சொல்லவில்லை!
அவனது கை, மெல்ல என் கன்னத்தை வருடிக் கொடுத்தது. இன்னொரு கை, முதுகை ஆறுதல் படுத்துவது போல், தடவிக் கொடுத்தது.
மெல்ல அவன் விரல்கள் என் காது மாடல்களை வருடியது!
எனக்கு கூசியது! அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன் பேசாமல். இன்னமும் என் கண்கள் மூடித்தான் இருந்தது.
அப்படியே வருடிக் கொடுத்த கை, மெல்ல அவளது பின்னங்கழுத்துக்குச் சென்றது. மெல்ல அவளது பின்னங்கழுத்தில் வருடிக் கொடுத்தவாறு, விரல் வட்டம் போட்டது.
எனக்கு குறுகுறு என்றிருந்தது. இன்னமும் அவனை இறுக்கிக் கொண்டேன். என் மூச்சுக்காற்று அவனது கன்னங்களைத் தீண்டியது. என் உதடுகள், அவனது கழுத்தில் உரசியது.
அவனால் நம்ப முடியவில்லை போலும். எப்படி திடீரென்று, அவனைத் தேடி வந்திருக்கிறேன் என்று திகைத்தான்.
Nice can you please upload next part
Story supera iruku..