நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், இப்போதும், என் மேலான அக்கறையில், இருக்கிறான். எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பதைக்கிறான்!
என் மனம் அவன் மேலான காதலில் வெறி கொண்டது! என்னையே கடிந்து கொண்டது.
இதற்கு மேலும், இவனைத் தவிக்க விட்டால், நானே என்னை மன்னிக்க மாட்டேன்.
மெல்ல, அவன் கையைத் தொட்டேன்.
சாரி மதன். நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்னு தோணுச்சு. அவ்ளோதான். ஃபோன் சைலண்ட்ல போட்டிருந்தேன் போல. நீ, தேடுனது எல்லாம் எனக்கு தெரியாது! சாரி! வெரி சாரி! நான் வேணும்னுல்லாம் பண்ணலை.
ப்ச்… விடு! நீ சேஃபா இருக்கிறதே போதும். நீ போயி ரெண்டு மணி நேரம் ஆகுது. போனவ ஸ்வெட்டரோ, ஓவர் கோட்டோ எடுத்துட்டு போயிருக்க வேண்டியதுதானே? உனக்குதான் குளிர் ஆகாதுல்ல???
அப்போதுதான் நான் அதை உணர்ந்தேன். என் உடல் மிகவும் சில்லென்று இருந்தது. குளிரில், என் உடல், என்னையறியாமல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அவனது உணர்வுகளில் மூழ்கிக் கொண்டிருந்தவளுக்கு இது எதுவும் தெரியவில்லை. இப்பொழுது, அவன் சொன்னவுடன் தெரிகிறது.
என்ன மாதிரியான காதல் இது? என் உணர்வுகளில், அவன் தடுமாறுகிறான். அவன் நினைவுகளில், நான் என் நிலை மறக்கிறேன்?!
இப்போது சுயநிலை வந்தவுடன், குளிர் எனக்கு நன்றாக உறைக்க ஆரம்பித்தது. குளிர் மெல்ல மெல்ல என் உடலில் ஏறிக் கொண்டிருந்தது.
வெளியே ஓரளவு இருட்டியிருந்தது. நவம்பர் மாத ஊட்டி குளிர் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நடுக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
நான் கைகளை தேய்த்துக் கொண்டேன். மெல்ல என்னை நானே கட்டிக் கொண்டேன். உதடுகளை அழுந்தப் பற்றிக் கொண்டேன்.
ஆனால், ஏற்கனவே என் உடலில் ஏறியிருந்த குளிரும், இப்பொழுது அதிகமாகும் குளிருக்கும் அது போதவில்லை!
நான் என்னை சாமாளிக்க முயற்சி செய்து கொண்டே, அவனைப் பார்த்தேன்.
ஆனால், அவனுக்கு புரிந்து விட்டது, என்னுடைய தடுமாற்றமும், செயலும் தெளிவாகச் சொல்லியது என் நிலையை!
Nice can you please upload next part
Story supera iruku..