என்னை அறியாமல், கால் மேல் கால் போட்டு, தலை நிமிர்ந்து, ஒரு பெருமிதத்தில், புன்னகையுடன், அவன் நினைவுகளில் ஆழ்ந்தேன்!
என் அழகை விட, என் அழுகை அவனை பாதிக்கிறது என்கிற பெருமிதம்!
எல்லாரையும் எளிதில் வெற்றி கொள்ளும் வீரன், என் கை அசைவிற்கு காத்திருக்கிறான் என்கிற இறுமாப்பு!
அவனுடைய சீற்றங்கள் எல்லாம், ஒரு சின்னப் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதென்ற தலைக்கனம்!
என் அழகைக் காட்டாமல், அன்பினையும் காட்டாமல், ஏன் எதையும் செய்யாமலேயே, அவனை எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் என்ற திமிர் என்னுள் ஏறியது!
என் மேல் அவ்ளோ லவ்வாடா? நான் எது சொன்னாலும் கேப்பியா?
அதென்ன போறப்ப, இனி நீ என் சொந்தம்னு சொல்லிட்டு போற? எந்த மாதிரி சொந்தம்? நான் என்ன உன் பொண்டாட்டியா? ம்ம்?
லூசு, என்னை மாதிரி ஒருத்தி டிரஸ்ஸில்லாம இருக்கிறப்பியும், ஃபீல் பண்ணிகிட்டு திரும்பி நிக்குது! இவனை வெச்சுகிட்டு என்ன பண்ண? குறைந்த பட்சம், அப்புடியே என்னைச் சமாதானம் பண்றேன்னு பக்கத்துல உக்காந்துருக்க வேணாம்?
இத்தனைக்கும் நானே, என்னை எடுத்துக்கோன்னு சொல்றேன். ஆனா, இவன் என்னமோ ரொம்பத்தான் ஃபீல் பண்றான்.
உண்மையில் நான் எப்படிச் சொன்னேன், அவன் எதற்காக திரும்பினான் என்பதெல்லாம் என் மனதிற்கு தோன்றவேயில்லை. என் மனம், என் மணாளனுடன், அவனை திட்டுவது போல் கொஞ்சிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் காதல் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது!
அவன் என் உணர்வுக்கு மரியாதை கொடுத்து திரும்பி நின்றதில் பெருமைப்பட்ட அதே மனம், காதல் என்று வந்தவுடன், ஏண்டா திரும்பி நின்ன என்று அவனிடமே செல்லச் சண்டையிடத் தொடங்கிவிட்டது!
சமயங்களில், காதலிலும், காமத்திலும், நியாயம் மிகப்பெரிய அநியாயமாகிறது! அநியாயம், மிகச் சரியான நீதியாகிறது!
அவனுடனான நினைவுகளில் எவ்வளவு நேரம் மூழ்கிக் கிடந்தேன் என்று எனக்கு தெரியவேயில்லை! சொல்லப்போனால், நான் உலகத்தையே மறந்து, அவன் நினைவுகளுடன் ஒரு தனி உலகத்திற்குள் இருந்தேன்.
Nice can you please upload next part
Story supera iruku..