அவன் இன்னும் காதலுடன் என்னை ரசித்தான்.
ஏனெனில் நான், அவன் கேட்ட படி மாறியிருந்தேன். அதாவது அவன் ஆசைப்பட்ட மாடர்ன் டிரஸ்ஸில்…
அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். இரண்டு நாட்களாக, அவன் என்னிடம் விளையாடிய காம விளையாட்டுகளும், எல்லாச் சமயத்திலும் அவன் என் மீது காட்டிய காதலும் சேர்ந்து, எனக்கு உள்ளுக்குள் புயலைக் கிளப்பியிருந்தது.
அவனுடைய கைகளை என்னோடு கோர்த்துக் கொண்டேன். அருகருகே அமரும் போது, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன். எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, அவனது அருகாமையை, அவன் காதலை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தேன்.
எனது அருகாமையை அவனும் ரசித்தாலும், ஏனோ, என்னைத் தொட தயங்கி நின்றான். ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல், நானே அவனது கையை எடுத்து என் தோள் மேல் போட்டுக் கொண்டேன்.
எனது செய்கைகளை, மகிழ்ச்சியை அவன் கவனித்துக் கொண்டே இருந்தான். அந்த நாள் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தாலும், சமயங்களில் என்னையே ஆழமாகப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படியே சுற்றிவிட்டு ரிசார்ட்டுக்கு வந்த போது இரவு ஆரம்பித்திருந்தது…
இரவில் மீண்டும், படுக்கையில் அவனது அணைப்புகுள் வந்த பொழுது அவன் கேட்டான்.
ஏன் லாவி, ஒரு வேளை உங்க அப்பாவும், சித்தியும் வந்து மன்னிப்பு கேட்டா நீ ஏத்துக்குவியா?
அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். பின் கேட்டாள்.
உங்க அப்பாவையும், சித்தியையும் நீ மன்னிச்சிடுவியா?
நான் மாட்டேன் என்று தலையாட்டினேன்.
நானும் அப்படித்தான். அவிங்க என் மேல அன்பு காட்டாததைக் கூட என்னால மன்னிக்க முடியும். ஆனா, என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வெச்சதை என்னால மன்னிக்கவே முடியாது! இனி என் வாழ்க்கைல, என் சைடுல இருந்து உறவுன்னு யாரும் கிடையாது.
அவள் அப்படிச் சொன்னவுடன் எனது அணைப்பு இறுகியது.
ப்ச்… அவிங்களைப் பத்தி எதுக்கு இப்ப பேசனும்? நீ வேறெதாவது கேளேன்.
கொஞ்சம் தயங்கியவன், என்னைப் பார்த்துச் சொன்னான். உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் லாவண்யா!
என்ன… சொல்லு!
இல்லை… வந்து… அக்கா, அவ பிரச்சினையைச் சொன்னதுக்கப்புறம், எனக்கு பயங்கர கோவம் வந்துடுச்சி. அதுவும் அந்த மோகன் மேல செம கோபம். அவிங்களை எப்படி பழிவாங்குனேன்னு….
மதன் சொல்லச் சொல்ல, அவனது வாயை, என் கையால் மூடினேன்.
நீ ஒண்ணும் சொல்ல வேணாம்!
இல்ல லாவண்யா… வந்து, அது நீ தெரிஞ்சு…
என்ன தெரிஞ்சிக்கனும்? கண்டிப்பா நீ அவங்களை சாதாரணமா அடிச்சிருக்க மாட்ட. வாழ்க்கைல இனி அவன் யார்கிட்டயும், இது மாதிரி நடந்துக்க முடியாத மாதிரிதான் அடிச்சிருப்ப.
எப்ப என் ஃபிரண்டு, நீ இதுக்காக வேலையை விட்டுட்டு, அங்க ரெண்டு மாசத்துக்கும் மேல போயி தங்குனன்னு சொன்னாளோ, அப்பியே தெரிஞ்சிடுச்சி. நீ அவனை மட்டுமில்லை, அவன் ஒய்ஃபையும் எதையோ பண்ணியிருக்கன்னு! அவளும்தான தப்பு பண்ணா?
Nice can you please upload next part
Story supera iruku..