கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

இருவரின் மனப்போக்கும் ஓரளவிற்கு ஒத்துப் போனதால், இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததால், தங்கள் ஓய்வு நேரத்தை ஒத்த காரியங்களில் செலவிட்டுக் கொண்டிருந்ததால், இயல்பாகவே ஒருவர் அடுத்தவரின் போல் ஈர்க்கப்பட்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக அவர்கள் நட்பு, பூத்துக் குலுங்கி மணம் வீசிக்கொண்டிருந்தது.
வழக்கம் போல் காலையில் எழுந்து தன் நண்பருடன் காலாற வாக்கிங் போய்வந்த ராமசாமி, சியாமளா கொடுத்த இரண்டாவது டோஸ் காபியை நிதானமாக ருசித்து குடித்தார். பரபரப்பில்லாமல் குளியலை முடித்துக்கொண்டு தன் ஈர வேட்டியை காய வைக்க மாடிக்கு வந்தார். வந்தவர் பார்வை எதேச்சையாக நடராஜன் வீட்டுப்பக்கம் செல்ல, மாடிப்படிக்கு அருகில் நின்றிருந்த சீனுவின் இறுக்கமான அணைப்பில் மீனா என்று யாவராலும் விளிக்கப்படும் மீனாட்சியைக் கண்டதும் அவர் மூச்சு ஒரு கணம் நின்று போனது.

வேறு யாராவதாக இருந்தால், இளம் காதல் ஜோடியின் நெருக்கத்தை தனது செல்லில் அழகாகப் பதிவு பண்ணி இணையத்தில் பிரசுரம் செய்து உடனடியாகப் பணம் பார்த்திருப்பார்கள்.

பார்த்தவர் யார்? இன்றைய இளசுகளையும், அவர்களின் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் மனம் போனபடி கொட்டமடிக்கும் நடவடிக்கைகளால்தான் இன்றைய உலகம் வெகு வேகமாக அழிவை நோக்கி செல்லுகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

தன் கடந்த கால பெருமையை, இளமையில் கடைபிடித்த ஒழுக்கத்தை, பெற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் தான் வைத்திருந்த மரியாதையை தினமும் சளைக்காமல் பார்ப்பவர்களிடமெல்லாம் பறை சாற்றும் ராமசாமி அல்லவா?

காலங்காத்தால இது என்ன கிரகசாரம்? அவர் தான் பார்ப்பதை நம்பமுடியாமல், தன் கண்களை ஒரு முறை தேய்த்து விட்டுக்கொண்டார். அதே நேரத்தில் சீனு, மீனாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டதைக் கண்டதும், அவர் உடல் நடுங்கியது. முகம் சிவந்து போனது.

சீனுதான் ஒரு அயோக்கியன். இந்த பொண்ணு மீனாட்சிக்குமா புத்தி கெட்டுப் போச்சு? அவர்கள் ஒருவர் அணைப்பில் ஒருவராக மெய்மறந்து நின்ற நிலையைக் கண்டதும், கோபம் அவர் தலையுச்சிக்கு ஏறியது.

“கம்மினாட்டீ … காவாலிப் பய… இவன் மூஞ்சும், மொகரக்கட்டையும், இவனைப் பாத்து மீனாட்சி விழுந்துட்டாளே? ஊர்ல நல்லப் பசங்களா இல்லாம போயிட்டானுங்க? இவன் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, இப்ப மீனாட்சியையே கடிக்கற அளவுக்கு வந்துட்டானா?”

சீனுவைக் கண்டால் ராமசாமிக்கு அறவே ஆகாது. அவர் உடல் ஆடியது. இப்ப நான் என்னப் பண்ணணும்? அவர் தன் நிலை தடுமாறி நின்றார். நடராஜன் காதுக்கு இந்த விஷயத்தை உடனடியா கொண்டுபோய், ஏதும் அறியாத இளம் பெண் மீனாட்சியின் மனசை கெடுக்கற இந்த சீனுவை, இந்த தெருவுல இருக்கற சொறி நாய்களை, ஒரு காலத்தில் என் தடியால அடிச்சி காலை ஒடைச்ச மாதிரி, அடிச்சி வெரட்டணும். நடராஜன் வீட்டுக்குள்ள அவன் திரும்பவும் எப்பவுமே நுழைய முடியாத மாதிரி பண்ணிடணும். மனதுக்குள் ஒரு உடனடித் தீர்மானம் கொண்டுவந்தார்.