கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

ராமசாமி தன் கண்ணால் கண்ட விஷயத்தை, நடராஜன் வீட்டில் நேரம் காலமில்லாமல் உண்டு உறங்கியெழும் சீனுவை ஒரு பிள்ளையைப் போல் நடத்தும், அவர் வீட்டிலேயே அவருக்கிழைத்த மாபாதகத்தை, அவரிடம் உடனே சொல்லி எச்சரிக்க வேண்டும் என ஓடிவந்தார்.

தனது அருமை நண்பரின் ஒரே மகள் மீனாவின் எதிர்கால திருமண வாழ்க்கை சீராக அமைவதில் தனக்கிருக்கும் அக்கறையை காட்ட வேண்டும் என்ற துடிப்பில், வேகமாக தன் மாடியை விட்டிறங்கி நடராஜன் வீட்டு கேட்டை நெருங்கிக்கொண்டிருந்தார்.

முருங்கை மரத்து வேரில் சாய்ந்து, தன் உடலை வளைத்து நீட்டி, காயும் இளம் வெய்யிலை சொகுசாக அனுபவித்துக் கொண்டிருந்த நொண்டிக் கருப்பன், சிவனை தரிசிக்க வந்த நந்தனாருக்கு இடைஞ்சல் செய்த நந்தியாக, ராமசாமியைக் கண்டதும், தன் காதுகளை விரைத்துக் கொண்டு லேசாக உறுமத் தொடங்கினான்.

கருப்பனின் உறுமலோசையைக் கேட்டதும், சீனுவின் வலுவான அணைப்பையும், அந்த அணைப்பு தந்த புதிய சுகத்தையும், அவன் உதடுகளின் அழுத்தத்தையும், அந்த உதடுகள் தன் முகத்தில் ஏற்றிய வெப்பத்தையும், கன்னங்கள் சிவக்க, மனதுக்குள் மீண்டும் மீண்டும் ரீவைண்டிங் செய்து கொண்டு, ஹாலில் மேலும் கீழுமாக காரணமேயில்லாமல் உழன்று கொண்டிருந்த மீனாவுக்கு ராமசாமியின் முகம் மனதில் தோன்ற வெராண்டாவிற்கு விறுவிறுவென வந்தாள்.