ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 217

என்னது தொல்லையா? என் குடும்ப வாழ்க்கையே முறிந்து போகும் அளவுக்கு வேதனை உண்டுபண்ணி இப்போது தொல்லை என்கிறாயா, என்று மனதில் திட்டியபடி நினைத்தேன். சரி என்ன தான் இந்த தேவடியா சிறுக்கி சொல்ல போறாள்.

“முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு தெரியும் நான் செய்தது ஒரு மன்னிக்க முடியாத செயல், உங்களுக்கு மன்னிக்கவும் மனம் வராது.”

நான் அவள் சொல்வதை வெறுப்போடு கேட்டேன். “இதையெல்லாம் தெரிந்து தானே செய்த,” என்று மனதில் அவளை திட்டேனேன்.

“உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்தத்துக்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.”

இவள் என்ன எதிர்பார்க்கிறாள்? பரவாயில்லை நீ செய்ததை எல்லாம் மறந்துட்டேன் என்று சொல்வேன் என்ற நினைக்கிறாளா? எனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்த என் புருஷனை நீ வழித்து போட்டிகிட்டேயே.

“ஆனால் இதில் முழுக்க முழுக்க என் தப்பு தான், மகேஷ் தப்பு கிடையாது.”

இப்போது தான் கோபமாக அவள் பக்கம் திரும்பி சொன்னேன்,”அவர் என்ன அவருக்கு உன்னை வக்காலத்து வாங்க சொன்னாரா?”

அவள் முகத்தில் வருத்தம், தவிப்பு இரண்டும் கலந்து இருந்தது.

“நோ நோ, மகேஷ் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, இன் பாக்ட், அன்றில் இருந்து அவர் என்னிடம் பேசுவது கூட கிடையாது.”

அவள் முகத்தை இப்போது தான் நேரடியாக உத்து பார்த்தேன், அதில் அவள் உண்மையையே தான் சொல்கிறாள் என்று புரிந்தது.

“இருந்தாலும் நடந்தது நடந்தது தானே, அவர் தெரிந்து தான் எனக்கு துரோகம் செய்தார்,” என் வார்த்தைகளில் என் கடுப்பு தெளிவாக தெரிந்தது.

இப்படி நான் சொன்னாலும் கூட நானும் அதே தப்பை தான் தெரிந்து செய்திருக்கேன் என்று என் மனதில் ஒரு பக்கம் உறுத்தியது.

“அவர் தப்பு செய்வதுக்கு நான் தான் காரணம், அவர் செய்த தப்புக்கு எப்படி துடித்தார் என்று எனக்கு தெரியும்,” அவள் கண்கள் கலங்கி இருந்தது.

“எனக்கும் என் புருஷனுக்கும் இருக்கும் பிரச்னைக்கு வீணாக மகேஷ் அவர்களை சம்பந்தப்படுத்தி, உங்கள் மணவாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை கொல்லுது.”

விட்டால் அங்கேயே அழுதுவிடுவாள் போலிருந்தது. என் மனம் கொஞ்சம் இளகியது.

“மகேஷ் எவ்வளோவோ என்னை தவிர்க்க பார்த்தார். நான் தான் விடாப்பிடியாக அவரை பின் தொடர்ந்தேன்.”

இப்போ எனக்கு அவள் மேல் இன்னும் கோபம் வந்தது.
மிக மெதுவாக ஆனால் மிக கடுப்புடன் சொன்னேன்,”ஏண்டி எத்தனை ஆண்கள் இருக்காங்க, அதுவும் மணமாகாத பயல்களும் உண்டு, உனக்கு என் புருஷன் தான் கிடைத்தானா?”

“அதற்க்கு காரணம் என் சுயநலமும், மஹேஷும் தான்.”

அவள் சொல்வதை கேட்டு அவள் முகத்தை கோபத்தோடு முறைத்து பார்த்தேன்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.