ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 232

அவர் உண்மையில் இதற்கு பிறகும் என்னை ஏற்று கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை வந்து என் உள்ளத்தில் சந்தோசம் பொங்கியது.

“அந்த பாக்கியம் எனக்கு மறுபடியும் கிடைத்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் நான் இப்படி நடந்திட்ட பிறகும் என்னை மன்னித்து ஏற்று கொள்வீர்களா?”

அவர் அதற்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு கேள்வி கேட்டார்,” உனக்கு ஏன் என் மேல் இவ்வளவு கோபம் வந்தது. அப்போது டிவோர்ஸ் கேட்டாய் இல்லை என்றல் நீயும் நான் செய்தது போல் செய்ய வேண்டும் என்றாய்.” “என்னை பிரிய அப்போது துணிந்தாய் ஆனால் இப்போது என்னுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறாய்.”

இதற்கு பதில் சொல்லும் முன் நானும் ஆழமாய் சிந்தித்தேன். அவர் என்னை அவசர படுத்தவில்லை. பிறகு மெல்ல பேச துவங்கினேன்.

“இதை பற்றி நானே இந்த சில நாட்களாக யோசித்திருக்கேன். இது வரை நான் என் மூளையை மட்டும் உபயோகித்து பதில்களை தேடினேன்.”

“இப்போது நீங்கள் மறுபடியும் இதை கேட்கும் போது என் உள்ளத்தில் என்ன தோன்றியது என்று என் மனதை கேட்டேன்.”

“இப்போது உன் மனது தெளிவானதா?” என்றார்.

“நான் மறுபடியும் உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அனால் இதற்கு கரணம் நீங்கள் தான்.”

“நான் உனக்கு துரோகம் செய்ததை சொல்கிறாயா?”

“அது விளைவு, காரணம் கிடையாது.”

அவர் ஒரு கேள்விக்குறியோடு என்னை பார்த்தார்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.