ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 158

ஒரு மணி நேரமாக பல சிந்தனைகள் என் மனதில் ஓடியது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தேன். அவர் செல் போன்க்கு கால் செய்தேன். ரிங் போனது அனால் அவர் எடுக்கவில்லை. இதுவே எனக்கு தவிப்பை உண்டாக்கியது. என்னுடன் பேச கூட அவருக்கு விருப்பம் இல்லையா?? இன்னும் இரண்டு முறை முயற்சித்தேன் அனால் இரண்டு முறையும் ரிங் போனது அனால் அவர் அட்டென்ட் பண்ணவில்லை. நான் பழைய சுவேதாவாக இருந்திருந்தால் என்னிடம் பேச விரும்பாதவருக்கு நான் ஏன் மறுபடியும் வலிய பேச முயற்சி செய்ய வேண்டும் என்று கோபத்தில் என் முயற்சியை விட்டு இருப்பேன். அனால் அந்த சுவேதா எப்போதோ இறந்துவிட்டாள் நான் அவர் ஒபிஸ்க்கு போன் செய்தேன்.

எனக்கு முன்பின் அறியப்படாத ஒரு பெண்ணின் குரல், “ஹலோ”, என்றது.

“ஹலோ, மகேஷ் இருக்கிறாரா?”

“நீங்க யார் பேசுறது,” என்று அந்த குரலின் சொந்தக்காரி கேட்டல். “நான் Mrs. மகேஷ் பேசுறேன்.”

“ஹாய் Mrs. மகேஷ் ஒரு நிமிஷம் இருங்கள்.”

சில வினாடிகளுக்கு பிறகு அதே பெண்ணின் குரல்,” அவர், கேபினில் இல்லை, அவர் செல் போன்க்கு அழைத்தீர்களா?”

“ரிங் போகுது அவர் எடுக்க வில்லை.”

“இருங்க கொஞ்ச நேரம்,” என்றபடி மீண்டும் சில வினாடிகளுக்கு அமைதி.

மறுபடியும்,”நான் அவர் கேபின் உள்ளே எட்டி பார்த்தேன், அவர் போன் அவர் மேஜையில் தான் இருக்கு. அவர் மீட்டிங்கில் இருக்காராம். வந்தவுடன் நீங்கள் கால் செய்ததை சொல்கிறேன்,” என்றாள்.

“தேங்க்ஸ்,” என்று சொல்லி கட் செய்தேன்.

இப்போது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அவரை போனில் அழைத்ததை அவர் புறக்கணிக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆகியும் அவர் என்னை கூப்பிடவில்லை. எனக்கு ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் வெந்தது போல் இருந்தது. பிறகு அவர் என் கைபேசியில் அழைத்த போது பட பட என்ற இதய துடிப்புடன் அதை எடுத்தேன்.

“ஹலோ, சுவேதா சொல்லு,” என்றார்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.