“இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். உங்கள் அன்பு பாசம், நீங்கள் என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த விதம். இது எல்லாம் அதற்கு காரணம்.”
“நான் என் பெற்றோர்கள் மறந்தேன், என் உறவினர்களை மறந்தேன், என் நண்பர்களை மறந்தேன். நீங்கள் மட்டும் என் உலகம் என்று இருந்தேன்.”
அவருக்கு மெல்ல நான் சொல்லவந்தது புரிய துவங்கியது. என் வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் உணரவேண்டியது அவசியமானது. என் மணவாழ்வின் எதிர்காலமே அதில் அடங்கி இருந்தது.
“அதே போல் நான் மட்டுமே உங்களுக்கு எல்லாம் என்று பூரித்து போய் இருந்தேன்.” “அன்றைக்கு அந்த சம்பவம் பார்த்த போது (நீங்கள் கள்ள உடலுறவு கொள்வதை என்று கூட என் வாயால் சொல்ல வரவில்லை.) என் உலகமே என் கண்கள் முன்னே நொறுங்கி விழுந்தது.”
நான் இப்போது மெதுவாக அழ துவங்கினேன். அந்த நினைவு இன்னமும் என் இதயத்தில் அந்த தாக்கத்தை உண்டு பண்ணியது. நான் சிரமப்பட்டு என் அழுகையை அடக்கிக்கொண்டேன். சிவந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் என் மேல் உள்ள பரிவு தெரிந்தது.
“உங்கள் மேல் அளவுக்கு அதிகம் அன்பு வைத்திருந்ததால் என் வலியும் அதே போல் இருந்தது.”
“அந்த நாட்களில் என் முழு நிதானமும் இழந்தேன். நான் என்ன செய்கிறேன் எப்படி நடகிறேன் என்ற எண்ணங்கள் எல்லாம் ஒரு குழப்பமான நிலையிலேயே போனது.”
“அதற்காக நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் செய்ததுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்.”
“உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை ஒதுக்கிவிடாதீர்கள் என்று கெஞ்ச கூட எனக்கு அருகதை இல்லை என்று தெரியும்.”
“இனி நீங்கள் தான் முடிவு எடுக்கணும். ஒன்று மட்டும் உறுதி நீங்கள் இல்லாத வாழ்கை எனக்கு நரகம் தான். அப்படி நடந்தால் நான் செய்ததுக்கு அது தகுந்த தண்டனை தான்.”
நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிவு அவர் கையில். இது வரைக்கும் நாங்கள் இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம்.
“வா சுவேதா வந்து இங்கே உட்காரு,” என்றார்.
காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi