அம்மா சமைத்துக் கொண்டிருக்கும்போதே எந்தவித எண்ணமும் இல்லாமல் எழுந்து நிருதியின் வீட்டுக்குப் போனாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அங்கும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தார்கள். அதிலும் அவளால் தன்னை பொறுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் திரும்பி தன் வீட்டுக்கே வந்துவிட்டாள். அம்மாவும் வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தாள். டிவியைப் போட்டுவிட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு கட்டிலில் கால் மடித்து உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாள்.
குளித்து வந்த அம்மா அவளுடன் பேசிக்கொண்டே உடையணிந்து உணவுண்டு “வீட்லயே இரு. தூங்காம படி” எனச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.
அம்மா சென்றபின் மனதுக்குள் தனிமையில் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் செய்வதற்கு வேறெதுவும் இல்லை என்பதும் புரிந்தது. இப்போதைக்கு படிப்பதே மேலானது. மனதைச் சீராக்கி ஒரு மணிநேரம் எண்ணம் சிதறாமல் படித்தாள். அதற்கு மேல் அவளின் தோழி கீர்த்தி வந்து வாசலில் நின்று அழைத்தாள். எழுந்து வெளியே சென்றாள்.
“என்னடி பண்ற?” எனக் கேட்டாள் கீர்த்தி.
“படிச்சிட்டிருக்கேன்”
“நான் கடைக்கு வந்தேன்”
இருவரும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே தோழிகள். ஆனால் வேறு வேறு கிளாஸ். வேறு வேறு குரூப்.
கீர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி கிளம்பி வந்தான். அவனைப் பார்த்ததும் அகல்யா பளிச்சென்று சிரித்தாள். அவனும் சிரித்து கொஞ்சம் சத்தமாய் கேட்டான்.
“சாப்பிட்டாச்சா?”
“இல்லண்ணா. நீங்க சாப்பிட்டிங்களா?”
“ஆச்சு” அவன் “பை” சொல்ல அகல்யா சிரித்தபடி “பை” சொல்லி டாடா காட்டினாள்.. !!
அன்றும் நிருதி மதிய உணவுக்கு வந்தபோது ஜன்னல் வழியாகப் பார்த்து பேசிக் கொண்டனர்.
”ஹாய் அண்ணா” என்றாள் அகல்யா.
”ஹாய் அகல் என்ன பண்ற? ”
”படிக்கறேன் ”
”நல்லா படி ”
”ம்ம்”
”வீட்லயேதான் இருக்கியா ?”
”ஆமாண்ணா. சாப்பிட்டதுமே எடுத்த புக் இன்னும் வெக்கவேல்ல”
“படி படி..”
“சாப்படறீங்களா?”
“ஆமா. நீ என்ன பண்ண?”
“இப்ப பசியில்ல. நான் அங்க வரட்டுமா?”
“வா..”
சிரித்து “தொல்லை பண்றேனா?”
“பரவால” என்று சிரித்தான்.
பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள். கொஞ்சம் முகத் திருத்தம் செய்து உடையையும் திருத்தினாள். பின் ஒரு துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டு மார்புகளை மறைத்து அவைகள் எடுப்பாகத் தெரிகின்றனவா என்பதைப் பார்த்தபின் உதட்டில் தவழும் சிறு புன்னகையுடன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டிலிருந்து கிளம்பினாள்.. !!
நிருதி உடை மாற்றியிருந்தான். பேன் டிவி எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் சாப்பிடத் தயாராகியிருந்தான். முகத்தில் தவழும் புன்னகையுடன் உள்ளே வந்தவளைப் பார்த்து தலையசைத்தான்.
“வா.. சாப்பிடு”
“சாப்பிடுங்க. எனக்கு பசியேல்ல”
“உக்காரு” அவள் தோற்றத்தைப் பார்த்தான்.
துப்பட்டாவை சரி செய்து சோபாவில் உட்கார்ந்தாள். அகல்யா தலைவாரி ஒற்றை ஜடை போட்டிருந்தாள். முகத் திருத்தம் செய்து சுடிதார் அணிந்திருந்தாள். இளநீல சுடிதார். டார்க் புளூ பேண்ட். மெல்லிய துப்பட்டா.
அவன் சாப்பிடத் தொடங்கினான்.
“கொஞ்சம் சாப்பிடு அகல்?”
“வேண்டாம்ணா நீங்க சாப்பிடுங்க”
“காலைல கீர்த்தி வந்திருந்தா மாதிரி இருக்கு?”
“ம்ம். அப்பதான் வந்தா. கொஞ்ச நேரம் பேசிட்டு போயிட்டா. அப்றம் நான் சாப்பிட்டு படிக்க உக்காந்துட்டேன்”
“பயங்கரமா படிக்கறபோல?”
சிரித்தாள். “போன் தரீங்களா?”
“எடுத்துக்க”
எழுந்து போனை எடுத்தாள். “லாக்?”