யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

“சரி”
“உங்க போன் தருவீங்களா?”
“எதுக்கு? ”
“ஒரு ரெண்டு வார்த்தை பேசணும். ப்ளீஸ். ரெண்டே வார்த்தைதான்” தவிப்புடன் கொஞ்சம் முன்னால் சரிந்து வந்தாள்.
“யாருகிட்ட?”
“அவன்ட்டதா”
“எவன்ட்டதா?”
“என் பாய் பிரெண்டுகிட்ட..” என்று சிரித்தாள்.
சிரித்தபடி சோபாவில் கிடந்த தன் போனை லாக் எடுத்து கொடுத்தான்.
“தேங்க்ஸ்ணா” சிரித்த முகத்துடன் சோபா நுனிக்கு வந்த வாங்கினாள்.
“ரெண்டு வார்த்தை எதுக்கு பத்தும். எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசிக்க” என்றான்.
“தேங்க் யூ” தயங்கி எழுந்து தனியாக எடுத்துப் போய் போன் செய்து பேசினாள். சில நிமிடங்கள் கழித்து மலர்ந்த முகமாக திரும்பி வந்தாள்.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ணா” அவனிடம் கொடுத்தாள்.
“இதுக்காகத்தான் அழுதியா?”
“ம்ம்”
“உன்கிட்ட போன் இல்லையா?”
“எங்கண்ணா எடுத்துட்டு போயிட்டான். அவன் போன் ரிப்பேர்னு. போனில்லாம பேசாம.. ரொம்ப கஷ்டம்”
“சரி. லவ்ல ஏதாவது பிரச்சினையா?”
“இல்ல. அவனுக்கு பீவர். பேசி ரெண்டு நாள் ஆச்சு. அதான்…”
“ஓஓ.. ஃபீலிங்கு?”
சிரித்தாள். “ம்ம்.. பாவம் அவன்”
“இப்ப எப்படி இருக்கான்?”
“பரவால்லேன்னான்”
“இப்ப.. நீ ஹேப்பி? ”
“ம்ம்..” தலையசைத்தாள் “தேங்க் யூ தேங்க் யூ”
“குட். யார் அவன்?”
“அவனை தெரியாது உங்களுக்கு” வெட்கச் சிரிப்பில் அவள் முக அழகு இன்னும் கூடியது.
“ஓஓ.. உன் கிளாஸா?”
“இல்ல.. காலேஜ் போறான்” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போன் வந்தது. சற்று முன் அவள் பேசிய அதே நெம்பர்.
“உன் ஆளுதான்” நெம்பரைப் பார்த்து விட்டு போனை நீட்டினான்.
“எதுக்கு கூப்பிடறான்” குழப்பமாக யோசித்து, லேசான பதட்டத்துடன் கை நீட்டி வாங்கினாள். அவளின் உடலசைவுகளை கவனித்தபடி அமர்ந்திருந்தான் நிருதி.
“ஏஏ.. இது பக்கத்து வீட்டு அண்ணாது. நான்தான் சொன்னேன்ல? இந்த நெம்பர்க்கு நீ கால் பண்ணாத. ப்ராப்ளம் ஆகிடும்” என்று மெலிதான பதட்டக் குரலில் சொன்னாள்.
“………”
“ம்ம்.. சரி.. ஆமா.. ஓகே. ஒடம்பை நல்லா பாத்துக்கோ. பை.. ச்சீ.. வெய்” இறுதியில் இதழ்கோணி வெட்கச் சிரிப்புடன் சொல்லி, உதடுகளை நாவால் வருடியபடி போனைக் கொடுத்தாள்.
“ஸாரிண்ணா.. என்கூட பேச ஆசைனு மறுபடி பண்ணிட்டான்” மெல்ல நெளிந்தாள். போனை வாங்கினான்.
“நோ ப்ராப்ளம். உனக்கு எப்பெல்லாம் வேணுமோ அப்ப பேசிக்க. பட் அந்தக்கா இல்லாதப்ப” என்று கண் சிமிட்டினான்.
அதன் அர்த்தம் புரிந்தது.
“ரொம்ப தேங்க்ஸ்ணா”
“எதுக்கு இத்தனை தேங்க்ஸ். மரியாதைக்கு ஒண்ணு போதும்”
சிரித்தாள் “ம்ம்”
“ஈவினிங் நான் உன்ன இப்படி பாக்க கூடாது”
“ஏன்?”
“நீட்டா ட்ரஸ் பண்ணி.. தலைவாரி.. அழகா பாக்கணும்”
“ம்ம்” மெல்லிய வெட்கத்துடன் தலையாட்டிச் சிரித்தாள் அகல்யா. அவளின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது.. !!

அன்று மாலை சூரியன் மறையும் முன் ஜன்னலில் தோன்றினாள் அகல்யா. குளித்து உடை மாற்றி மேக்கப் செய்து பளிச்சென்று இருந்தாள். சூரியனின் மாலையொளிக் கீற்று அவள் முகத்தில் பட்டு அவளின் முகம் பொன்னிறமாய் மின்னியது. பால்நிலா முகம் எனும் சொற்றோடரின் அர்த்தம் அவள் மூலமாகப் புரிந்தது நிருதிக்கு. தன் முகம் கண்டு கனியும் அவன் பார்வை அளிக்கும் மகிழ்ச்சியை வெட்கத்தில் மறைத்துச் சிரித்தாள் அகல்யா.
“ஓகேவா அண்ணா?”
“சூப்பர்” கண்களை விரித்துச் சொன்னான். “இதான் அகல்யா”
“ஓகேதானே?”
“க்யூட்டா இருக்க.”
“தேங்க் யூ?”
“உங்கம்மா வரலையா?”
“இல்லண்ணா”
“கண்ணுக்கு மை போட்டியா?”
“லேசா”
“லிப்ஸ்டிக்?”