நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 70

”வா கார்த்தி.. அம்மாவ பாத்துட்டு போவியாம்..” என அவனை அழைக்க….

”ஸாரி உமா. .” பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான் ”இப்ப நா.. கொஞ்சம் அவசரமா போகனும். .. உன் வீட்ட பாத்து வெச்சுக்கலாம்னுதான் வந்தேன். தப்பா நெனச்சுக்காத.. இந்தா.. என்னோட விசிட்டிங் கார்டு…” என ஒரு அட்டையை நீட்டினான்.

வாங்கிக் கொண்டாள் ”வாயேன் கார்த்தி…”
”இன்னொரு நாள் வறேன் உமா. .” என்றான் கெஞ்சும் குரலில் ”இன்னொரு நாள் கண்டிப்பா வறேன்… இப்ப நேரமில்ல…. ம்…?”
”சரி… ” என்றாள் ”கண்டிப்பா வரனும். ..”
”நிச்சயமாக வருவேன்.. உன் நெம்பர் சொல்லு…” என அவன் கை பேசியை எடுத்தான்.
அவள் நெம்பர் சொல்ல… எண்களை அழுத்தி… ரிங் விட்டான்.
அவள் கைபேசி ஒலிக்க…

”இது என்னோட பர்ஸ்னல் நெம்பர். . எப்ப வேனா நீ கூப்பிடலாம்.. சேவ் பண்ணிக்க..” என்றான்.
”சரி… நாளைக்கு வர்றியா…?”
”நாளக்கு உறுதி சொல்ல முடியாது. .உமா…! ஆனா கண்டிப்பா வருவேன்..!” என பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.

”கார்த்தி…” சட்டெனக் கூப்பிட்டாள் உமா.
” சொல்லு உமா. ..?”
” இல்ல. .. உண்மையச் சொன்னா.. இப்ப நான்.. பணத்துக்காத்தான் போய்.. அலஞசுட்டு வறேன்..! எங்கயுமே கெடைக்கல…! இன்னிக்கு எலக்ட்ரிக் பில் கட்டனும். .. அம்மாக்கும் மருந்தெல்லாம் வாங்கனும். . ஆனா கைல சுத்தமா.. பணமில்ல…”
”என்ன உமா நீ… எவ்ளோ வேனும். .?”
” இப்போதைக்கு. .. ஒரு முண்ணூறு…ரூபா… நாளைக்குன்னா.. பைனோடதான் கட்டனும். .”

தன் கடிகாரம் பார்த்தான் ” ரெண்டு மணியோட க்ளோஸ் பண்ணிருவாங்களே..?”
” ஆமா கார்த்தி..”

பாக்கெட்டிலிருந்து…கற்றையாகப் பணம் எடுத்து… மேலாக இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து.. அவளிடம் கொடுத்தான்.

” அடுத்த வாரம்.. என் சம்பளம் வந்துரும்..” என வாங்கினாள்.

சிரித்தான் ” போதுமா..?”
” ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி..”

மெதுவாக”இந்த நிமிசம் கூட உன்கிட்ட. . நான் ஒன்னு சொல்ல ஆசப்படறேன் உமா. .” என்றான்.
”என்ன கார்த்தி..?”
” ஐ லவ் யூ… அரை லூசு..”

அவள் நெஞ்சம் விம்மியது.

அவன் சிரித்துக்கொண்டே… ”பைடி… அரை லூசு… அப்றமா கால் பண்றேன்..” என்று விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

அவன் சொன்ன. ..
”ஐ லவ் யூ… அரை லூசு..” அவள் நெஞ்சுக்குள் இனித்தது.

அவனால்.. அவளுக்குச் சூட்டப்பட்ட செல்லப் பெயர்..
‘அரை லூசு..’

அவன் ஒவ்வொரு முறை… அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் போதும். . அவன் சொல்லும் வார்த்தை…
‘ அரை லூசு….!!’

அவன்.. கண்ணிலிருந்து மறையும்வரை.. அவனையே பார்த்தாள் உமா….!!!!

வீட்டுக்குள் போனதும். . தண்ணீர் குடித்தாள் உமா.
கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்த அம்மா கேட்டாள்.
”பணம் கெடச்சுதா..?”
” ம்…” இப்போது அவள் மனசில் கசப்பு இல்லை. மெலிதான ஒரு பரவசம்.. ஏற்பட்டிருந்தது.

”குடு.. நான் போய் கட்டிட்டு வரேன்..” என்றாள் அம்மா.
”வேண்டாம். . நானே போறேன்.”
” சாப்பாட்டு நேரமாகிருச்சு.. கூட்டமா இருக்கும்… நான் போனா.. யாருகிட்டயாவது குடத்து கட்டிருவேன்..! குடு.. பக்கம்தான…”

அம்மா சொல்வதுதான் சரி. மொத்த பணத்தையும் அம்மாவிடமே கொடுத்தாள்.
”கரண்ட் பில் கட்னது போக.. உனக்கு மருந்து.. மாத்திரையெல்லாம் வாங்கிக்க”
” அப்படியே மார்க்கெட் போய்..கறி..காய் ஏதாவது வாங்கிட்டு வந்துரட்டுமா…?”
”உன்னால முடியுமா..?”
” ம்..! முடியாம என்ன. .?”
” சரி.. நல்லதா பாத்து வாங்கு.. இந்த தருதலை இன்னும் வல்லியா..?”
”காலைல போனவன் இன்னும் காணம்.. ஒரு நாள் லீவ் விட்டாலும். . வீட்லயே இருக்கறது கெடையாது..”
” அந்தப் பக்கம் எங்காவது கண்ல பட்டான்னா.. கூட்டிட்டு போ…” என்றாள்.
” ம்…” மெதுவாக எழுந்து போனாள் அம்மா.

கார்த்திக் பற்றி.. எண்ணத்தொடங்கினாள் உமா.

பருவம் வரும்வரை.. பள்ளித் தோழன். பருவம் வந்த பின்..காதலன்.!
அவளும் பூப்படையும் முன்னமே அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டிள்.!
பக்கத்து. . பக்கத்து வீடு. . ஒருமுறை.. பொங்கல் பண்டிகையின் போது.. அவளுக்குப் புதுத்துணி எடுத்துத்தர வேண்டும் என்பதற்காக.. அவன் வீட்டில் இருந்து பணம் திருடியிருககிறான்.
அவன் கொடுத்த.. புதுத்துணிக்குபா பரிசாக… அவளையே கேட்டான்.
அவள் மறுத்தாள்.